News May 1, 2024
பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் கையாளக்கூடாது

பிரதமர் மதம், சாதிக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே தவிர, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளக் கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “வாக்கு வங்கிக்காக மத அரசியல் செய்யும் பிரதமரைக் கண்டிக்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை அது வெறுப்புப் பேச்சு. அவசியப்படும் இடங்களில் பாஜகவை வன்மையாகக் கண்டிப்போம்” என்றார்.
Similar News
News November 15, 2025
நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு<<18287304>> இலவச சைக்கிள்<<>> வழங்கும் திட்டத்தை காரைக்குடியில் DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து, சென்னை பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். நாளை விடுமுறை என்பதால், திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலவச சைக்கிள் பெற யாரெல்லாம் வெய்ட்டிங்?
News November 15, 2025
உங்கள் அறையை பிரகாசிக்க வைக்கும் 10 கலர்கள்

வீட்டை கண்கவர வைக்கும் வல்லமை வண்ணங்களுக்கு உண்டு. சரியான வண்ணம், ஒரு அறையை வெளிச்சம் அதிகமாக பரவச் செய்யவும், சிறிய அறையை பிரமாண்டமான இடமாக மாற்றவும் உதவும். இந்த 10 வண்ணங்கள் உங்கள் அறையை அப்படியே மாற்றிவிடும். அது என்னென்ன வண்ணங்கள் என்று தெரிஞ்சுக்க, மேலே பகிர்ந்துள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 15, 2025
சொந்த கட்சி மீதே காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி: PM

தேர்தல் தோல்விக்கான காரணம் தெரியாமல் ECI மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதாக PM மோடி விமர்சித்துள்ளார். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவர்களிடம் பணியாற்றிவர்கள் இன்று மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பிஹார் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் போலி முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


