News May 17, 2024

முதல்வரை பார்த்து பிரதமர் கற்றுக்கொள்ள வேண்டும்

image

பிரதமர் மோடி அனைத்து மக்களுக்குமான பிரதமராக இருக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி பொதுவானவராக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை போல் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். மேலும், ஜூன் 6ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அதுவரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாது எனக் கூறினார்.

Similar News

News January 10, 2026

‘TAPS’.. புதிய மொந்தையில் பழைய கள்: EPS விளாசல்

image

மத்திய அரசின் UPS-யை பெயர் மாற்றம் செய்து <<18749969>>அறிவிக்கப்பட்டுள்ள TAPS<<>>, ஒரு ஏமாற்றும் திட்டம் என EPS விமர்சித்துள்ளார். இதனை, ‘புதிய மொந்தையில் பழைய கள்’ எனவும் சாடியுள்ளார். அத்துடன், பழைய பென்ஷன் திட்டத்தின் முக்கிய அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அவ்வப்போது பென்ஷனை உயர்த்தி மறுநிர்ணயம் செய்யும் பரிந்துரை TAPS-ல் இல்லை எனவும், 10% சம்பளம் பிடித்தம் ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 10, 2026

மத்திய அரசின் முடிவை வரவேற்று PM-க்கு CM கடிதம்

image

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த திட்டமிட்டுள்ள மத்திய அரசின் முடிவை வரவேற்பதாக PM மோடிக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் இதை மிகுந்த கவனத்தோடு செயல்படுத்த மாநில CM-க்கள், பிரதிநிதிகள் குழுவை அமைக்க வலியுறுத்திய அவர், சமூக இயக்கவியல், சாதிய கட்டமைப்பு வேறுபாடுகளை கவனத்தோடு கையாளவில்லை என்றால், சமூக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

News January 10, 2026

‘நான் சாகப் போறேன்.. என் சாவுக்கு காரணம் இதுதான்’

image

‘எனது தற்கொலை எண்ணங்களை வெல்வேன் என நினைத்தேன். ஆனால், அதில் தோல்வி அடைந்துவிட்டேன். இந்த வேலை எனக்கு கடினமாக இருக்கிறது’. டெல்லி சாகேத் மாவட்ட கோர்ட்டில் எழுத்தாளராக பணியாற்றிய ஹரிஷ் சிங் மஹரின் கடைசி வரிகள் இவை. 60% மாற்றுத் திறனாளியான அவர், வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் சோக முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!

error: Content is protected !!