News December 5, 2024
காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்வு

மழை காரணமாக தமிழகத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. சென்னையில் முருங்கைக்காய் 1 கிலோ ₹400க்கும், சில்லறை விற்பனையில் ₹500க்கும், ஒரு முருங்கை ₹45-55க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு 1 கிலோ சில்லறை விலையில் ₹500க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் ₹90க்கும், சின்ன வெங்காயம் ₹80க்கும் விற்கப்படுகிறது. வரத்து குறைவால் அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News December 4, 2025
Business 360°: சேவைத்துறை வளர்ச்சி அதிகரிப்பு

*கடந்த நவம்பரில், நாட்டின் சேவைத்துறை 59.8 புள்ளிகளை பெற்று வளர்ச்சி அதிகரித்துள்ளதாக தகவல் *பூஷான் பவர்ஸ் நிறுவனத்தில் ஜப்பானின் ஜே.எப்.இ ஸ்டீல்ஸ் நிறுவனம் ₹15,750 கோடி முதலீடு *இந்தியாவில் 5 லட்சம் கார்களை விற்றுள்ளதாக ஸ்கோடா அறிவிப்பு *ரிலையன்ஸின் எண்ணெய் நிறுவனமான நயாரா, கடந்த நவம்பரில் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரட்டிப்பாக்கியுள்ளது.
News December 4, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் வரவிருப்பதால், திமுகவும், அதிமுகவும் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி – எஸ்.பி.வேலுமணி இடையே மாற்றுக்கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
News December 4, 2025
நாய் வாகனம் இன்றி காட்சி காட்சிதரும் யோகபைரவர்!

சிவகங்கை, திருப்பத்தூரிலுள்ள திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் நாய் வாகனம் இன்றி காட்சி தருகிறார். சிவ பக்தனான இரண்யாட்சனின் மகன்கள் தேவர்களை துன்புறுத்த, சிவன் பைரவராக விஸ்வரூபம் எடுத்து, அவர்களை வதம் செய்தார். அசுரர்கள் என்றாலும் இருவரும் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க இங்கு பூஜை செய்து, யோகபைரவராக காட்சி தருகிறார். யோக நிலையில் உள்ளதால் நாய் வாகனம் இல்லை.


