News April 27, 2024
மளிகைப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக மிளகாய் தூள், மஞ்சத்தூள், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பொட்டுக் கடலை, கடுகு, சர்க்கரை உள்ளிட்ட 22 பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே காய்கறி, பழங்களின் விலை விண்ணை முட்டும் சூழலில், மளிகைப் பொருட்களும் விலை உயர்வது வேதனையளிப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 11, 2025
எங்களுக்கு வேறு வழியில்லை: நெதன்யாகு

ஹமாஸை வீழ்த்த காஸா முழுவதும் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காஸாவை சுதந்திரப்படுத்துவதே தங்களது குறிக்கோள் எனவும், மக்கள் பலி, உதவிப்பொருட்கள் பற்றாக்குறைக்கு ஹமாஸே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காஸாவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு குறுகிய கால அட்டவணை தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
இந்தியாவை பார்த்து பொறாமை: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்வது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாக டிரம்ப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக விமர்சித்துள்ளார். நானே எல்லோருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைப்பதாகவும், அதனாலேயே இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
News August 11, 2025
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6.1 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக, ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.