News September 13, 2024

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

image

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News November 26, 2025

கவர்னர் திமிரை அடக்கணும்: CM ஸ்டாலின்

image

அமைதிப்பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என கவர்னர் திமிரெடுத்து பேசியிருப்பதாக CM ஸ்டாலின் சாடியுள்ளார். கவர்னரின் திமிரை அடக்க வேண்டும் என்ற அவர், தீவிரவாத தாக்குதலில் மக்கள் பலியாவதை தடுக்கமுடியாத பாஜக ஆட்சியை அவர் புகழ்ந்து பேசுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழர்களை தேசவிரோதிகள் என சித்தரிக்கும் கவர்னரின் பேச்சு கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

டெஸ்டில் இந்தியாவின் மிக மோசமான தோல்வி இதுவே!

image

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி, இந்திய அணிக்கு மறக்க முடியாத வடுவாக மாறியுள்ளது. டெஸ்ட் போட்டியில் ரன்களின் அடிப்படையில், இந்திய அணி அடைந்த மிகப்பெரிய தோல்வி இதுவே. இதற்கு முன்பாக, 2004-ம் ஆண்டு ஆஸி.,க்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமான தோல்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தோல்விக்கு என்ன காரணம் என நினைக்கிறீங்க?

News November 26, 2025

ஆன்லைனில் ஆடை trial பார்க்கும் சூப்பர் App

image

இனி ஆன்லைனில் ஆர்டர் செய்த ஆடை நமக்கு பிட் ஆகுமா என்ற கவலையே வேண்டாம். ‘Google Doppl’ AI ஆப் மூலம், ஆடை பிட் ஆகுமா இருக்குமா என்பதை அணியாமலேயே அறிய முடியும். உங்களுக்கு பிடித்த ஆடைகளை இந்த ஆப்பில் அப்லோட் செய்தாலே, அதை உங்களுக்கு அணிவித்து காட்டும். இதை வைத்து நாம் ஆடைகளை ஈஸியாக செலக்ட் செய்யலாம். தற்போது USA-ல் சோதனையில் உள்ள இச்செயலி, விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

error: Content is protected !!