News September 13, 2024
பூக்களின் விலை கடுமையாக உயர்வு

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News November 28, 2025
‘டிட்வா’ எதிரொலி: காய்ச்சல் முகாம்களுக்கு உத்தரவு

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 28, 2025
பைசன் படத்தை புகழ்ந்த கிரிக்கெட்டர் DK

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய CM ஸ்டாலின்

ஜெ.ஜெயலலிதா கவின் கலை பல்கலை.,-யின் 3-வது பட்டமளிப்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதில், வாழ்நாள் சாதனைக்காக நடிகர் சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய CM, ஒரு கலைஞனாகவே பட்டம் வழங்க வந்துள்ளதாக தெரிவித்தார். சிவகுமார் தனக்கு சகோதரர் போன்றவர் எனக்கூறிய CM, ஜெ., பல்கலை.,-க்கு ₹5 கோடி மானியத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.


