News September 13, 2024

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

image

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News December 1, 2025

முகத்தில் இத தடவுறீங்களா? ALERT!

image

முகத்தில் எலுமிச்சை சாறை தடவுவதால் நன்மை கிடைப்பதை விட சருமத்துக்கு பல தீங்குகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிம்பிள்ஸை அதிகமாக்கும், சருமத்தின் இயற்கையான pH சமநிலையை சீர்குலைக்கிறதாம். எனவே எலுமிச்சை சாறை முகத்தில் தடவுவதற்கு பதிலாக அதனை குடித்தால் நன்மை கிடைக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

News December 1, 2025

உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

image

உலகளவில் பல்வேறு துறைசார்ந்த தரவரிசை பட்டியல்களில் இந்தியா முன்னேறி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. இருப்பினும் சுற்றுச்சூழல், வாழ்க்கைமுறை உள்ளிட்ட சில துறைகளில் பின்தங்கி உள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில், எந்தெந்த துறைகளில் இந்தியா எந்த தரவரிசையில் உள்ளது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 1, 2025

BREAKING: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு

image

கனமழை காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது. இதேபோல், நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை., தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!