News September 13, 2024

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

image

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News December 10, 2025

குமரி: ஓடும் பஸ்ஸில் 9 பவுன் நகை பறிப்பு

image

முதப்பன் கோடு ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74). நேற்று (டிச.9) வெட்டுவென்னி கிறிஸ்தவ ஆலயத்திற்கு பிரார்த்தனை செய்ய சென்று விட்டு மதியம் முக்கூட்டுகல் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கிய போது கழுத்தில் இருந்த 9 பவுன் நகையை யாரோ அபேஸ் செய்திருப்பது தெரிந்தது. இதுகுறித்து அருமனை போலீசில் அளித்த புகார் படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2025

பரபரப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்

image

பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டம், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தேர்தல் வியூகம், மக்கள் சந்திப்பு, பூத் கமிட்டி கூட்டங்கள் உள்ளிட்ட பலவும் இன்று விவாதிக்கப்பட உள்ளன. மேலும், பிரிந்தவர்களை சேர்ப்பது குறித்து விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News December 10, 2025

BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

image

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!