News September 13, 2024

பூக்களின் விலை கடுமையாக உயர்வு

image

தமிழகத்தில் அனைத்து மலர் சந்தைகளிலும் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ₹800க்கும், பிச்சி ₹600க்கும் விற்பனையான நிலையில், ஓணம், ஆவணி கடைசி முகூர்த்த நாள்களை முன்னிட்டு கடுமையாக விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ₹1,500க்கும், மல்லிகைப்பூ ₹2,500க்கும், அரளிப்பூ ₹400க்கும், முல்லைப் பூ ₹1,500க்கும் விற்பனையாகிறது. நாளை இன்னும் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News December 4, 2025

ஆபாச புகைப்படம்.. கொந்தளித்த ரஷ்மிகா

image

AI பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என ரஷ்மிகா மந்தனா வலியுறுத்தியுள்ளார். AI-ல் உருவாக்கப்பட்ட ரஷ்மிகாவின் ஆபாச போட்டோ SM-ல் காட்டுத் தீ போல் பரவியது. இதுகுறித்து X-ல் அவர், AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி, ஆனால் அதை ஆபாசமான விஷயங்களை உருவாக்கவும், பெண்களை குறிவைத்து தாக்கவும் சிலர் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

News December 4, 2025

அப்துல் கலாம் பொன்மொழிகள்!

image

*துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை *வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை *ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம் *உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்

News December 4, 2025

அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி?

image

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக திமுக அரசை சாடும் அன்புமணி, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், தான் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க EPS-க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கான சமிக்ஞை ஆக கருதப்படுகிறது. எனினும் ராமதாஸுடனும் ADMK பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுகின்றன.

error: Content is protected !!