News March 27, 2024
டீசல் விலையால் விலைவாசி உயர்ந்துள்ளது

டீசல் விலை அதிகரித்ததே விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அத்தியாவசியப் பொருட்கள் 40% அளவுக்கு விலையேற்றம் கண்டதாக குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாகக் கூறினார். மேலும், வீட்டு வரி, தண்ணீர் வரி, குப்பை வரி என திமுக அரசு அனைத்திற்கும் வரி விதிப்பதாக அவர் கடுமையாக விமர்சித்தார்.
Similar News
News February 6, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மே 1 – 31 வரை ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. So, குழந்தைகளே நீங்கள் ஜாலியாக விளையாடலாம், பெற்றோர்களே நீங்களும் டூர் செல்ல திட்டமிடலாம்.
News February 6, 2026
இன்று தை கடைசி வெள்ளி.. இதை மறக்காம பண்ணிடுங்க

எலுமிச்சை மாலை சாற்றுவதன் மூலம், அம்மனின் முழு அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு விசேஷமான காலங்கள் என்பதால், தை கடைசி வெள்ளி கிழமையான இன்று அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று தவறாமல் எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபடுங்கள். குறிப்பாக, ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றினால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஆன்மிக மரபு.
News February 6, 2026
அதிமுக கூட்டணியில் வேல்முருகன்?

திமுக கூட்டணியில் தொடர்வதாக தவாக வேல்முருகன் கூறிவந்தாலும் தனக்கு உரிய மரியாதையும், தொகுதிக்கு போதிய நிதியும் தரவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் அதிமுக மா.செ.,க்களிடம் வேல்முருகனின் செல்வாக்கு குறித்து EPS கேட்டறிந்தாராம். அதேநேரம் நிர்வாகிகளுடன் வேல்முருகன் நடத்திய ஆலோசனையில் சிலர் அதிமுகவை ஆதரிக்கலாம் என்றுள்ளனர். இதற்கு தேர்தல் நெருங்கட்டும் பார்க்கலாம் என அவர் தெரிவித்தாராம்.


