News June 6, 2024

கங்கனாவை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட்

image

சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலரை CISF சஸ்பெண்ட் செய்துள்ளது. விமான நிலையத்துக்கு வந்த கங்கனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் காவலர் அவரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, பெண் காவலருக்கு எதிராக CISF தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறாக பேசியதற்காக கங்கனாவை அந்த காவலர் அறைந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 23, 2025

அக். 14-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

image

அக்.14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல்நாளில், மறைந்த முன்னாள் MLA-க்கள் 8 பேர் & வால்பாறை MLA-வுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், 2025-26 கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எத்தனை நாள்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

image

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

திமுக MPக்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக MP-க்களின் ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியுள்ளது. வாக்குத் திருட்டு புகார் தொடர்பாக போராட்டம் நடத்துவது, 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

error: Content is protected !!