News March 1, 2025

காவல்துறை செய்தது தவறு: அண்ணாமலை

image

சீமான் விவகாரத்தில் போலீசார் நடந்து கொண்ட முறை சரியல்ல என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சீமானிடமே நேரில் சம்மனை வழங்கியிருக்கலாம் என கூறிய அவர், தேடப்படும் குற்றவாளியின் வீட்டில்தான் சம்மன் ஒட்டுவார்கள் என்றார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்று விமர்சித்த அவர், காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.

Similar News

News March 1, 2025

பாக்.கில் IND விளையாடாதது நல்லது: உத்தப்பா

image

சாம்பியன் டிராபி போட்டியில் பாகிஸ்தானில் வைத்து இந்தியா விளையாடாதது நல்லது என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். துபாயில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள உத்தப்பா, பாகிஸ்தானில் இப்போட்டி நடந்திருந்தால், இரு அணிகளும் பரஸ்பரம் புகார் தெரிவிக்க வேண்டிய நிலை வந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

News March 1, 2025

நியூஸ் பேப்பரில் வடை கொடுத்தால் ₹1,000 அபராதம்

image

நியூஸ் பேப்பர் அச்சு மையில் காரீயம் உள்ளது. இதனால், அதில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்கள் வைத்து சாப்பிட்டால், நமது உடலுக்குள் காரீயம் சென்று தீங்கு ஏற்படுத்தும். இந்நிலையில், சிவகங்கையில் நியூஸ் பேப்பரில் வடை விற்பனை செய்த கடைகளுக்கு ₹1,000 அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத் துறையினர், மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

News March 1, 2025

தரையில் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களா?

image

டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட, தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். தரையில் தட்டை வைத்து, குனிந்து உணவை எடுத்துச் சாப்பிடுகையில் ஜீரணம் எளிதாகிறது. தசை- உடல்வலிகள் நீங்குகின்றன. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் உணர்கிறோம். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அமைதியையும் தருகிறது என்கின்றனர். நீங்க எப்படி சாப்பிடுகிறீர்கள்?

error: Content is protected !!