News March 21, 2024
ஆளுநருக்கு எதிரான மனு இன்று விசாரணை

ஆளுநர் ரவி பொன்முடியை அமைச்சராக நியமிக்காததற்கு எதிரான தமிழக அரசின் மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டுமென்ற மனு மீதும் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதாக தமிழக அரசு அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.
Similar News
News October 27, 2025
இன்று இரவு 12 மணி முதல் மொத்தமாக மாறுகிறது

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2-ம் கட்ட SIR மேற்கொள்ளப்படும் என ECI அறிவித்துள்ளது. அதனால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்வது நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு Enumeration Form வழங்கப்படும். அதில் உள்ள விவரங்கள் 2003 வாக்காளர் பட்டியலோடு ஒத்துபோனால், மேலதிக ஆவணங்களை சமர்பிக்க தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
News October 27, 2025
சற்றுமுன்: விஜய்க்கு ஆதரவு

கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து, விஜய் ஆறுதல் தெரிவித்ததற்கு பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். கரூர் சென்றால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது என்பதால் மாமல்லபுரத்திற்கு அழைத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருக்குமோ என்ற அச்சத்தில் விஜய் இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News October 27, 2025
SIR ஏன் நடத்தப்படுகிறது தெரியுமா? ECI விளக்கம்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன் மேற்கொள்ளப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். 1951 முதல் 2004 வரை 8 முறை மட்டுமே SIR நடத்தப்பட்டதாகவும், கடைசியாக 21 ஆண்டுகளுக்கு முன்னர் 2002 – 2004-ல் நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, தேர்தலுக்கு முன்பு வாக்காளர் சரிபார்ப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.


