News March 27, 2024
கட்சியில் இருந்த ஒரே எம்பி பாஜகவில் இணைந்தார்

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பஞ்சாப் மாநிலம் AAP கட்சியில் இருந்த ஒரே ஒரு MP சுஷில் குமார் ரிங்கு இன்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், “எனது கட்சி எனக்கு சரியாக ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைத்துள்ளேன்” என்றார்.
Similar News
News December 4, 2025
ஸ்டாலினின் சூழ்ச்சியால் பிரச்னை எழுந்தது: நயினார்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீசாரை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் CM ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஸ்டாலினின் பிரித்தாலும் சூழ்ச்சியினால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கிவருவதால் திமுக நடுக்கத்தில் இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
News December 4, 2025
சமந்தா கணவரின் EX மனைவி எமோஷனல் பதிவு

சமந்தா உடனான திருமணம் நடந்து 3 நாள்களுக்கு பிறகு, ராஜ் நிடிமோருவின் EX மனைவி ஷியாமளி தனது இன்ஸ்டாவில் எமோஷனல் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பல நாள்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்போது தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் அவர் அதில் கூறியுள்ளார். மேலும், கவன ஈர்ப்பிற்காகவோ, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிராமா நடத்தவோ இதை பதிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசுக்கு அதிர்ச்சி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் HC அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசு கடமையை தவறியதாலேயே CISF வீரர்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.


