News March 27, 2024

கட்சியில் இருந்த ஒரே எம்பி பாஜகவில் இணைந்தார்

image

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பஞ்சாப் மாநிலம் AAP கட்சியில் இருந்த ஒரே ஒரு MP சுஷில் குமார் ரிங்கு இன்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், “எனது கட்சி எனக்கு சரியாக ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைத்துள்ளேன்” என்றார்.

Similar News

News October 26, 2025

BREAKING: தேர்தல் கூட்டணி.. புதிய அறிவிப்பை வெளியிட்டார்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணியை உருவாக்குவேன் என ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் பேசிய அவர், பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்து பாருங்கள் என்றார். திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு, போக போக தான் தெரியும் எனக் கூறினார். தந்தை, மகன் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் அதிமுக, அன்புமணியுடன் கூட்டணிக்கு நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 26, 2025

₹40,000 சம்பளம்.. மத்திய அரசில் 340 காலியிடங்கள்!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ✦கல்வித்தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree ✦வயது: 21- 25 ✦தேர்ச்சி முறை: கணினி வழி தேர்வு & நேர்காணல் ✦சம்பளம்: ₹40,000- ₹1,40,000 வரை ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 14-ம் தேதி. முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News October 26, 2025

நாளை தவெகவுக்கு முக்கியமான நாள்

image

கரூர் துயரம் தொடர்பான வழக்குகள் சென்னை HC-ல் நாளை(அக்.27) விசாரணைக்கு வரவுள்ளன. ➤முன்ஜாமின் கோரி புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு ➤ஆதவ் அர்ஜுனா மீது பதிந்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ➤கரூர் எஸ்பி உள்ளிட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய மனு ➤அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரிய மனு என தவெக தொடர்பான அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன.

error: Content is protected !!