News March 27, 2024
கட்சியில் இருந்த ஒரே எம்பி பாஜகவில் இணைந்தார்

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பஞ்சாப் மாநிலம் AAP கட்சியில் இருந்த ஒரே ஒரு MP சுஷில் குமார் ரிங்கு இன்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், “எனது கட்சி எனக்கு சரியாக ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைத்துள்ளேன்” என்றார்.
Similar News
News November 27, 2025
தமிழக பாஜக தலைவர் மாற்றமா?

நயினாரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால், டெல்லிக்கு அழைத்த பாஜக தலைமை, அவருக்கு சில அறிவுரைகள் வழங்கியதாக தகவல் வெளியானது. இதனால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு, நாராயணன் திருப்பதி மறுப்பு தெரிவித்துள்ளார். NDA கூட்டணி வெற்றி பெற்றுவிடுமோ என்ற பயத்தில், திமுக இதுபோன்ற வதந்தியை பரப்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவர் பதவியில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.
News November 27, 2025
சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நெய்வேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.
News November 27, 2025
BREAKING: தமிழ்நாட்டை நோக்கி வரும் புதிய புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக IMD தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும். இந்த புயலுக்கு ஏமன் நாடு பரிந்துரைத்த ‘டிட்வா’ என பெயரிடப்படும். மேலும், புயலாக வலுப்பெற்ற பின் வட தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


