News March 27, 2024

கட்சியில் இருந்த ஒரே எம்பி பாஜகவில் இணைந்தார்

image

தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பஞ்சாப் மாநிலம் AAP கட்சியில் இருந்த ஒரே ஒரு MP சுஷில் குமார் ரிங்கு இன்று கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பின் பேசிய அவர், “எனது கட்சி எனக்கு சரியாக ஆதரவளிக்கவில்லை. பிரதமர் மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைத்துள்ளேன்” என்றார்.

Similar News

News December 6, 2025

புதிய பாபர் மசூதியின் தற்போதைய நிலை என்ன?

image

1992, இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019-ல் SC அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான வரைபடத்தை இறுதி செய்யும்பணி முடியும் நிலையில் உள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான காலக்கெடு 2026, ஏப்ரலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

News December 6, 2025

Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

image

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற <>skillindiadigital.gov<<>> இணையதளத்துக்கு சென்று பார்வையிடுங்கள். இதில் வீடியோ வடிவில் பாடங்களை நீங்கள் கற்கலாம். அனைவருக்கும் SHARE THIS.

News December 6, 2025

விஜய்யை சந்தித்தது தெரியாது: செல்வப்பெருந்தகை

image

காங்., நிர்வாகி <<18476742>>பிரவீன் சக்கரவர்த்தி<<>> விஜய்யை சந்தித்தது பேசுபொருளானது. இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி தனக்கு தெரியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி பற்றி மேலிடத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளதாக கூறிய அவர், திமுகவோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

error: Content is protected !!