News October 15, 2025
சட்டப்பேரவையில் நுழைந்த தவெக

2026-ல் மாற்றம் வரும், நாம் ஆட்சி செய்யப் போகிறோம் என கூறிவந்த தவெக, தேர்தலில் போட்டியிடாமலேயே பேரவைக்குள் நுழைந்துவிட்டது. ஆனால், மக்கள் பிரச்னைக்காக குரல் எழுப்புவதற்காக அல்ல. மாறாக, 41 பேரின் குடும்பங்களின் ஆறாத வடுவில் ஏற்பட்ட துயருக்காக. எல்லா கட்சிகளும் பல்வேறு இடையூறுகளை தாண்டி தான் வெற்றிப்படியில் ஏறியது வரலாறு. மக்களுக்கு ஏற்பட்ட இந்த கலங்கத்தை தாண்டி, விஜய்யும் அரசியலில் கோலோச்சுவாரா?
Similar News
News October 15, 2025
இந்த தீபாவளிக்கு இத பத்தியும் யோசிங்க!

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் அதை மதிக்காதவர்களே இங்கு அதிகம். 2024-ல் இந்தியாவில் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு கொடியதாக இருக்கும் காற்று மாசுபாட்டை குறைக்கவே அரசு இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த தீபாவளிக்காவது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். SHARE.
News October 15, 2025
பிரபல நடிகர் காலமானார்

பாலிவுட்டின் பிரபல நடிகர் ‘ராமாயண புகழ்’ பங்கஜ் தீர் (68) காலமானார். கேன்சரால் பாதிக்கப்பட்டு போராடிவந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்துள்ளது. தூர்தர்ஷன் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘மகாபாரத்’ டிவி சீரியலில், கர்ணன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தீரஜ். பல பாலிவுட் படங்களிலும், சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகமும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 15, 2025
செருப்பு மட்டுமல்ல, பாட்டிலும் வீசப்பட்டது: அமைச்சர்

கரூர் தவெக கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாக கூறப்படுவது குறித்து நயினார் நாகேந்திரன் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், செருப்பு வீச்சை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை என்றார். இதனையடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கீழே விழுந்த ஒருவருக்கு உதவுவதற்காகவே செருப்பு வீசப்பட்டதாக கூறினார். அத்துடன் பாட்டில், தேங்காயும் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.