News April 18, 2024

ஓட்டுப்போட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மரணம்

image

மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன் தபால் ஓட்டு போட்டார். பின் சிறிது நேரத்திலே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மரணிக்கும் தருவாயிலும் அவர் ஜனநாயகக் கடமையாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Similar News

News August 17, 2025

கை தசைகளை பலப்படுத்தும் புஜங்காசனம்!

image

✦முதுகுவலியை விரட்டவும், முதுகு மற்றும் கை தசைகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
➥தரையில் குப்புறப் படுக்கவும். இரு கைகளையும் தோள்பட்டை நிலைக்கு கொண்டு வந்து, உடல் எடையை உள்ளங்கையில் தாங்கவும்.
➥மூச்சை உள்ளிழுத்து தலையை உயர்த்தி, முதுகை முடிந்தவரை வலைத்து மார்பை முன்னோக்கி நீட்டவும்.
➥இந்த நிலையில் 15- 30 விநாடிகள் வரை இருந்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.

News August 17, 2025

ED-யை கண்டு அச்சத்தில் திமுக அமைச்சர்கள்: செல்லூர் ராஜு

image

திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

News August 17, 2025

இட்லி கடை அக். வெந்துவிடும் SORRY வந்துவிடும்: பார்த்திபன்

image

‘இட்லிக்கடை’ படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக இன்ஸ்டாவில் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அதில், இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் ஆச்சர்யமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இட்லிக்கடை அக்டோபரில் வெந்துவிடும் SORRY வந்துவிடும் எனவும், மிளிரினால் என்பதை மிருணாள் என படித்தால் நான் பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!