News September 12, 2024

பொய் சொன்ன அதிகாரி: கண்சிவந்த உதயநிதி!

image

சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் அளித்திருந்த மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாஸிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர், அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக கூறினார். பின்னர், போனில் உதயநிதி விசாரிக்கையில், அதிகாரி கூறியது பொய் என தெரியவந்தது. இதையடுத்து, சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Similar News

News August 17, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- மங்களூரு சென்ட்ரல் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் நாளை (ஆக.17) கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது. எனினும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.

News August 17, 2025

நான் இருக்கிறேன்.. BCCI-க்கு சாம்சன் அனுப்பிய செய்தி!

image

ஆசிய கோப்பை நெருங்கி வரும் நிலையில், அணியில் இடம்பெறுவோமா என்ற கேள்விகளுக்கு மத்தியில், சஞ்சு சாம்சன் ஒரு செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் நடத்திய உள்ளூர் டி20 போட்டியில் அரைசதம் அடித்து, KCA செயலாளர் லெவன் அணிக்கு வெற்றிக்கு உதவியுள்ளார். 36 பந்துகளில் 54 ரன்களை விளாசி, தான் இன்னும் ஃபார்மில் தான் இருக்கிறேன் எனும் செய்தியை தேர்வுக்குழுவிற்கு அனுப்பியுள்ளார்.

News August 17, 2025

அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

image

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.

error: Content is protected !!