News March 20, 2024

தேசிய ஊரக வேலை நாள் எண்ணிக்கை உயர்த்தப்படும்

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ” வேலை நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயர்த்தப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

அற்ப அரசியல் லாபத்திற்காக பேசும் PM மோடி: சீமான்

image

தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற PM மோடியின் பேச்சு, தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவினர் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக மோடி கூறியதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியை மோடி சுமத்தியுள்ளதாக சீமான் சாடியுள்ளார்.

News November 1, 2025

தினம் 2 முட்டை சாப்பிட்டால்…

image

*உணவுகளில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது முட்டை தான். வைட்டமின்கள் B5, B2, B12, B6, K, E, மற்றும் D, கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய நுண்சத்துகள் உள்ளன. *முட்டை நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. *புரதமும், பிற சத்துகளும் நிறைந்திருந்தாலும் குறைவான கலோரி கொண்டது. *உடனடி ஆற்றலை கொடுக்கும். இதிலுள்ள லூட்டின், வைட்டமின் A சத்துகள் பார்வை திறனை அதிகரிக்கும்.

News November 1, 2025

LSG ஹெட் கோச் ஆகிறாரா யுவராஜ் சிங்?

image

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், IPL 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு DC, GT ஆகிய அணிகளுடனும் யுவராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் பிளேயராகவும் யுவராஜ் விளையாடியுள்ளார்.

error: Content is protected !!