News March 20, 2024

தேசிய ஊரக வேலை நாள் எண்ணிக்கை உயர்த்தப்படும்

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ” வேலை நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயர்த்தப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 9, 2025

ஃபோன் தொலைந்தால் என்ன செய்யணும் தெரியுமா?

image

இந்தியாவில் <<17653918>>செல்போன் திருட்டு <<>>வாடிக்கையாகிவிட்டது. உங்கள் ஃபோன் திருடுபோனால் என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள். ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை நோட் செய்து, போலீசிடம் புகாரளிக்கவும் ➤அதன் பிறகு கூகுளில் https://www.ceir.gov.in/ போர்ட்டலுக்குள் சென்று ஃபோன் குறித்த தகவல்களை உள்ளிடுங்கள் ➤மொபைலில் உள்ள ஆக்டிவ் சிம்மை பிளாக் செய்யவேண்டும். SHARE.

News September 9, 2025

செங்கோட்டையன் புதிய முடிவு.. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

image

டெல்லியில் FM நிர்மலா சீதாராமனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஒருங்கிணைந்த அதிமுகவாக 2026 தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என அவர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்று பிற்பகலில் தமிழகம் திரும்பும் செங்கோட்டையன், TTV தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளார். முன்னதாக OPS-ம் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News September 9, 2025

மீண்டும் மறுப்பு.. நீதிமன்றத்தை நாடும் தவெக?

image

தனது பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து துவங்கவிருக்கிறார் தவெக தலைவர் விஜய். இதற்காக போலீஸாரிடம் அனுமதி கேட்கப்பட்டு வருகிறது. ஆனால், பிரசார இடத்தை மாற்ற வேண்டும், பேசும் நேரத்தை குறைக்க வேண்டும், மாற்று சாலைகளில் ரோடு ஷோ செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதாம். இந்நிலையில், இது அரசியல் உள்நோக்கோடு கூறப்படுவதாக கருதும் தவெக, நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!