News August 6, 2025
நெல்லையில் அடுத்த பயங்கரம்: 16 வயது சிறுவனுக்கு வெட்டு

கவின் ஆணவப்படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சியே ஒயாத நிலையில், சேரன்மகாதேவியில் வீடு புகுந்து பள்ளி மாணவனை 5 சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியுடன் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவன் பழகியதால் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவன் சிகிச்சையில் உள்ள நிலையில், 5 சிறார்களும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News March 13, 2026
வேலூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!
News March 13, 2026
ரத்த ஆறு ஓடும்: ஈரான் எச்சரிக்கை

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு சொந்தமான தீவுகள் மீது போர் தொடுத்தால் பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைக்கு போர் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்பதால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் என அச்சம் எழுந்துள்ளது.
News March 13, 2026
பெட்ரோல் விலையை உயர்த்திய நாடுகள்

ஈரான் போர் நடந்து வரும் நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால், சுமார் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. இதில், கம்போடியா – 68%, வியட்நாம் -49%, நைஜீரியா – 35%, லாவோஸ் – 32.9%, கனடா – 28%, பாகிஸ்தான் – 24%, மாலத்தீவு – 18.5%, ஆஸ்திரேலியா – 18.2%, அமெரிக்கா – 16.5%, சிங்கப்பூர் – 15.6% ஆகிய நாடுகள் அதிக விலை உயர்வை சந்தித்துள்ளன.


