News October 8, 2025
அடுத்த வழக்கை தொடர்ந்த தவெக

கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை HC அமைத்திருந்தது. வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழு அக்.5-ம் தேதி விசாரணையை தொடங்கியது. இந்நிலையில், இந்த விசாரணை குழுவுக்கு தடை கோரி SC-யில் தவெக மேல்முறையீடு செய்துள்ளது. தங்களுடைய கருத்தை கேட்காமல் குழுவை அமைத்ததாகவும், SIT குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 8, 2025
BIG BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.8) 2-வது முறையாக அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹800 அதிகரித்திருந்த நிலையில், சற்றுமுன் மேலும் ₹680 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹11,385-க்கும், சவரன் ₹91,080-க்கும் விற்பனையாகிறது. இது வரும் நாள்களிலும் நீடிக்கும் என தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
News October 8, 2025
2026 நடக்கவுள்ள பேரழிவுகள்: வெளியான கணிப்பு

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். 2025-ம் ஆண்டில் கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும், பூகம்பங்கள் நிகழும், வெள்ளம் வரும், வேலையின்மை அதிகரிக்கும் என கணித்திருந்தார். இந்நிலையில் 2026-க்கான இவருடைய கணிப்புகள் வெளியாகியுள்ளது. அது என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோகளை SWIPE பண்ணுங்க. இதை பிறருக்கு SHARE பண்ணுங்க.
News October 8, 2025
குழந்தைகள் பாதுகாப்பில் இன்று கருப்பு நாள்: அன்புமணி

குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் வலிமையற்று இருக்கிறோம் என்பதற்கு தஷ்வந்த் வழக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தஷ்வந்த் தவறு செய்யவில்லை என்றால் ஹாசினியை கொலை செய்தது யார்? எனவும், இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்றும் தெரிவித்துள்ளார்.