News August 24, 2024
நேர்த்திக் கடனின் போது உயிரிழந்த புது மாப்பிள்ளை!

திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷுக்கும், சுவாதிக்கும் 15 தினங்களுக்கு முன்புதான் திருமணமானது. நரேஷுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தால், திருப்பதி கோயிலுக்கு படியேறி வருவதாக அவரது பெற்றோர்கள் வேண்டியிருந்தனர். அதன்படி, நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயில் படி ஏறினார் நரேஷ். மொத்தமுள்ள 3,550 படிகளில் 2,350வது படியை ஏறிய போது, நரேஷ் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார்.
Similar News
News November 25, 2025
வரலாற்று படுகொலையின் சாட்சி மௌனமானது!

வரலாற்றின் கருப்பு பக்கமாக கருதப்படும் நிகழ்வுகளில் ஒன்றான துல்சா இனப்படுகொலையில் இருந்து தப்பித்தவரான வயோலா பிளெட்சர் காலமானார். 1921-ல் அமெரிக்காவின் துல்சா நகரில் கருப்பின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நகரமே அழிக்கப்பட்ட நிலையில், சுமார் 6,000 பேர் பாதிக்கப்பட்டு, 300 பேர் பலியாகினர். அப்போது 7 வயதாக இருந்த வயோலா பிளெட்சர், தற்போது 111 வயதில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.
News November 25, 2025
தாக்கத்தை ஏற்படுத்துமா OPS, செங்கோட்டையன் அரசியல்

அதிமுகவை ஒருங்கிணைத்தே தீருவோம் என்று தேவர் குருபூஜை அன்று டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சபதம் ஏற்றனர். ஆனால், சபதம் எடுத்து 25 நாள்களிலேயே புதிய கட்சியை தொடங்குவேன் என்று OPS கூறுகிறார். மறுபுறம் செங்கோட்டையனோ தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க தொடங்கினால், 2026-ல் தமிழக அரசியலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
News November 25, 2025
600 முறை மரணத்தை ஏமாற்றிய லெஜண்ட் காஸ்ட்ரோ!

கியூப புரட்சியாளரும், முன்னாள் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோ மறைந்த நாள் இன்று. அவரை கொல்ல அமெரிக்கா 600 முறை முயற்சித்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். ஆனால் அந்த 600 சதி திட்டங்களையும் தகர்த்தெறிந்து 90 வயது வரை வாழ்ந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2016-ம் ஆண்டு நவ.25-ம் தேதி வயது மூப்பின் காரணமாகவே அவர் காலமானார். இன்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஐகான்களில் ஒருவராக திகழ்கிறார்.


