News August 24, 2024

நேர்த்திக் கடனின் போது உயிரிழந்த புது மாப்பிள்ளை!

image

திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷுக்கும், சுவாதிக்கும் 15 தினங்களுக்கு முன்புதான் திருமணமானது. நரேஷுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தால், திருப்பதி கோயிலுக்கு படியேறி வருவதாக அவரது பெற்றோர்கள் வேண்டியிருந்தனர். அதன்படி, நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோயில் படி ஏறினார் நரேஷ். மொத்தமுள்ள 3,550 படிகளில் 2,350வது படியை ஏறிய போது, நரேஷ் மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தார்.

Similar News

News November 11, 2025

தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிப்பு

image

கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை, நவ.13-ம் தேதி சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் அவர் பெறவுள்ளார். 2 தேசிய விருதுகள், பத்ம ஸ்ரீ, தமிழ்நாடு அரசின் விருது உள்ளிட்டவற்றை வென்ற அவரது கலைப் பயணத்தில் செவாலியே விருது மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. தோட்டா தரணிக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News November 11, 2025

குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஈஸி டிப்ஸ்!

image

தற்போது மழைக்காலம் என்பதால் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஈஸியான வழி இருக்கிறது. ஒரு பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து மசித்து, அதனுடன் மிளகு, தேன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொடுங்கள். 1 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். குழந்தைகளை நோயிலிருந்து காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 11, 2025

மனிதர்களுக்கு இருக்கும் சூப்பர் பவர் பற்றி தெரியுமா?

image

சில மனிதர்கள் அசாதாரணமான செயல்களை அசால்ட்டாக செய்வார்கள். கிட்டத்தட்ட சூப்பர் பவர் போல சாத்தியமற்ற செயல்களை செய்து அசத்துவார்கள். என்னென்ன சூப்பர் பவர் கொண்ட மனிதர்கள் உள்ளனர் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களை வியப்படைய செய்த சூப்பர் பவர் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!