News April 16, 2025
அவுரங்கசீப்பிற்காக ஐநாவை நாடிய முகலாய வாரிசு

இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன், அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்க கோரி ஐநாவை நாடியுள்ளார். ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோவிற்கு எழுதிய கடிதத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னத்தில் மாற்றம் செய்வது சர்வதேச விதிகளை மீறுவதாகும், எனவே கல்லறையை பாதுகாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி யாகூப் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 19, 2025
கிராம உதவியாளர்களுக்கு குரல் கொடுத்த ஓபிஎஸ்

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களை போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கால முறை ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News April 19, 2025
வரலாற்றில் இன்று!

➤உலக கல்லீரல் தினம்
➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
➤1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
➤1957 – முகேஷ் அம்பானி பிறந்தநாள்.
➤போலந்தில் பெரும் இன அழிப்பு நினைவு நாள்.
News April 19, 2025
இந்த செய்தி உண்மையில்லை: அதிமுக மறுப்பு

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றம் தலையீடு கூடாது; அப்படி தலையிட்டால் நீதி பரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு என இபிஎஸ் பேசியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது. சிறுபான்மையினருக்கும், நீதித் துறைக்கும் எதிரான கருத்தை இபிஎஸ் கூறியதாக திமுகவினரால் நியூஸ் பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.