News March 16, 2024
மீனவர் குடும்பத்திற்கு எம்.பி நேரில் சென்று ஆறுதல் கூறினார்

காரைக்கால் அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மற்றும் மீனவர்களை ஒரே வாரத்தில் கைது செய்த நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களை நேற்று இரவு புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்தார்.
Similar News
News October 23, 2025
புதுச்சேரி: கனமழை பாதிப்புகள் குறித்து தகவல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2 நாட்களில் புதுச்சேரியில் 21 செ.மீ. மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாய பாதிப்பு குறித்து துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர் என்றார்.
News October 23, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..வங்கியில் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள 50 மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: வங்கி வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.64,000-ரூ.1,20,940
4. வயது வரம்பு: 25-32
5. கடைசி தேதி : 30.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!
News October 23, 2025
புதுச்சேரி: தாவரவியல் பூங்கா நாளை திறப்பு

புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக விளங்கும் தாவரவியல் பூங்கா மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ளது. சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 3500 மரங்களுடன் கூடிய தாவரவியல் பூங்கா ஸ்மார்ட் திட்டத்தின் மூலம் ரூ.9.11 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் 2023ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. தற்போது அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் ரங்கசாமி பூங்காவை திறந்து வைக்கிறார்.