News December 17, 2024
மரங்களின் தாய் நம்மை விட்டு பிரிந்தார்

சுற்றுச்சூழல் பாதுகாவலரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கவுடா (86) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். 60 வருடங்களுக்கும் மேலாக காடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட துளசி, இதுவரை 30,000 மரக்கன்றுகளை நட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த துளசி, எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாக என்றென்றும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
Sports Roundup: இன்று தமிழ் தலைவாஸ் Vs பெங்களூரு புல்ஸ்

* ஸ்விஸ் மகளிர் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு PM மோடி வாழ்த்து. * சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி. * ஆசிய கோப்பையில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராப்ட்-ஐ நீக்க வேண்டும் என்ற பாக். கோரிக்கை நிராகரிப்பு. *டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 3,000 ரன்கள் அடித்து UAE வீரர் முகமது வஸீம் சாதனை. * புரோ கபடியில் இன்று தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதல்.
News September 16, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு ஏமாற்றம்

புதிதாக 17 லட்சத்திற்கு மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல், அண்ணா பிறந்தநாளையொட்டி செப்.15-ல் வெளியாகும் என கூறப்பட்டது. இதனால், அரசின் அறிவிப்பு வெளியாகும் என நேற்று ஆர்வமுடன் காத்திருந்த மகளிருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுமாறு அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 16, 2025
2-வது திருமணம்: வருத்தத்தில் மீனா!

நடிகை மீனா 2-வது திருமணம் செய்யப்போகிறார், இந்த நடிகருடன் தான் திருமணம் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து, அண்மையில் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மீனா, இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து விவாகரத்தான நடிகர்களுடன் தனக்கு திருமணம் என வெளிவந்த செய்திகள் மனதளவில் மிகவும் வருத்தமடைய செய்ததாக கூறினார். மீனாவின் கணவர் வித்யாசாகர் 2022-ல் காலமானார்.