News March 17, 2024
முதல்வருக்கு அமைச்சர் நன்றி

திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆணை பிறப்பித்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய அலுவலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.இதில் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்பேத்குமார், கிரி, சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News November 18, 2025
தி.மலை: மனைவிக்கு சரமாரி அடி – கணவன் கைது!

தி.மலை: பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, செவ்வந்தி. கணவன் மனைவியான இவர்கள், கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று கணவர் வீட்டில் இருந்த 9 வயது மகளை அழைத்துச் செல்ல செவ்வந்தி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபு தனது உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
News November 18, 2025
தி.மலை: மனைவிக்கு சரமாரி அடி – கணவன் கைது!

தி.மலை: பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, செவ்வந்தி. கணவன் மனைவியான இவர்கள், கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று கணவர் வீட்டில் இருந்த 9 வயது மகளை அழைத்துச் செல்ல செவ்வந்தி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபு தனது உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
News November 18, 2025
தி.மலையில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்!

திருவண்ணாமலை கஸ்தம்படி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்–ஜோதி தம்பதி, நிலத்தகராறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதியர் தீக்குளிக்க முயன்றதில், பூங்கொடி என்பவர் உயிரிழந்தார். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.


