News October 22, 2025
அமைச்சர் பேரவையிலும் பொய் சொல்கிறார்: EPS

தஞ்சை காட்டூரில் மட்டும் கொள்முதல் செய்யப்படாமல் 5,000 நெல் மூட்டைகள் சாலையில் கொட்டி, 20 நாள்களாக காத்திருப்பதாக EPS கூறியுள்ளார். ஆகஸ்ட்டிலேயே செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க மத்திய அரசு அனுமதி அளித்தும், அனுமதி கிடைக்கவில்லை என அமைச்சர் (சக்கரபாணி) பேரவையிலும் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டினார். நெல் கொள்முதலில் பழைய விலையே கொடுக்கப்படுவதால், விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 24, 2026
BIG NEWS: ஸ்டாலினுக்கு ஷாக்.. புதிய கருத்துக்கணிப்பு

CNN News18-ன் கருத்துக்கணிப்பில், CM ஸ்டாலினை விட EPS சிறப்பான ஆட்சியை வழங்கியதாக மக்கள் கூறியுள்ளனர். இந்த தேர்தலில் திமுக+ 40.1%, அதிமுக+ 38.1%, தவெகவுக்கு 14.8% வாக்குகள் கிடைக்கும்; தொகுதிகள் அடிப்படையில் திமுக+(113-123), அதிமுக+(106-116), தவெக(2-8) வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 200 தொகுதிகளை திமுக+ வெல்லும் என நம்பியிருந்த CM ஸ்டாலினுக்கு, இந்த கருத்துக்கணிப்பு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.
News March 24, 2026
கேட்டதில் 99% தொகுதிகள் கொடுத்துள்ளார்கள்: TTV

அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய TTV தினகரன், நாங்கள் கேட்டதில் 99% தொகுதிகள் கொடுத்துள்ளார்கள் என்றும், 11 தொகுதிகளிலும் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார். அதிமுக அலுவலகத்திற்கு 1987 முதல் வருகிறேன். கடந்த 7,8 ஆண்டுகளாக தான் வரவில்லை; இங்கு ஜெயலலிதா இருப்பதை உணர்கிறேன். தேர்தலில் NDA அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
News March 24, 2026
மூத்த தலைவர் தத்தா மேகே காலமானார்

காங்கிரஸ், பாஜகவில் முக்கியத் தலைவராக விளங்கிய தத்தா மேகே(89) காலமானார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவர், காங்கிரஸ் சார்பில் நாக்பூரில் போட்டியிட்டு 4 முறை லோக் சபா MP ஆகியுள்ளார். மேலும், 1999-ல் தேசியவாத காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்தபோது, இவர் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2014-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தத்தாவின் மறைவுக்கு நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


