News April 22, 2025
கூட்டம் சேரலயாம்.. காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட்

கார்கே நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்ததால் காங். மாவட்டத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காந்தி, அம்பேத்கரை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் காங். கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகாரில் கார்கே பங்கேற்ற கூட்டத்தில் காலி சேர்களே அதிகம் இருந்துள்ளன. இதனால், கூட்டம் நடைபெற்ற புக்சார் மாவட்டத்தின் காங். தலைவர் மனோஜ் குமார், கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 24, 2025
நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே: ஸ்டாலின்

டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே என CM ஸ்டாலின் சாடியுள்ளார். சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை என்றெல்லாம் அரசியல் செய்தார் EPS. ஆனால், தற்போது நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வலியுறுத்தி போராடும் விவசாயிகளுக்கு துணை நிற்காமல், யாரிடம் அனுமதி பெற வேண்டும் என EPS காத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
News November 24, 2025
Cyclone Alert… கனமழை வெளுத்து வாங்கும்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று(நவ.24) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 29-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. SHARE IT.
News November 24, 2025
இந்தியாவுடன் AI பார்ட்னர்ஷிப் அமைக்கும் ஜப்பான்

நேற்றைய ஜி20 மாநாட்டிற்கு மத்தியில் PM மோடி, ஜப்பான் PM டக்காய்ச்சி தானே உடன் சுமார் 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செமிகண்டக்டர் மற்றும் AI உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


