News October 9, 2025

விஷமாக மாறிய மருந்து.. குழந்தையை கொன்ற துயரம்

image

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த திவ்யான்ஷ் (6) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தையின் தந்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை நாளொன்றுக்கு 4 முறை கொடுத்துள்ளார். மருந்து விஷமாக மாறி பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பட்டியலில், இக்குழந்தை பெயர் இல்லாததால், அரசின் ₹4 லட்சம் நிவாரணமும் கிடைக்கவில்லை.

Similar News

News January 23, 2026

CM-க்கு இது தெரியவில்லை: வானதி

image

PM மோடி TN-க்கு வந்து திட்டங்களை தொடங்கிவைத்த நிகழ்ச்சிகளில் CM ஸ்டாலின் பங்கேற்றதில்லை என வானதி விமர்சித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டுமே TN-க்கு PM வருவதாக <<18932079>>ஸ்டாலின் விமர்சித்திருந்ததை<<>> குறிப்பிட்டு பேசிய அவர், அரசியலுக்காக அல்லாமல் எத்தனை முறை TN-க்கு PM வந்திருக்கிறார் என ஸ்டாலினுக்கு தெரியவில்லை என்றார். மேலும், அவர் தெரியாமல் பேசுகிறாரா (அ) வேண்டுமென்றே பேசுகிறாரா என கேள்வியெழுப்பினார்.

News January 23, 2026

கனமழை எச்சரிக்கை.. 7 மாவட்டங்களில் அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை விலகியதாக அண்மையில் IMD அறிவித்தது. ஆனால், தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், தி.மலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வெளியே செல்லும்போது குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் மக்களே!

News January 23, 2026

2 கொலையாளிகள்.. ஜெயிலில் காதல், பரோலில் திருமணம்!

image

ராஜஸ்தான் சங்கானேர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் பிரியா சேத் & ஹனுமான் பிரசாத் ஆகியோருக்குள் காதல் மலர்ந்துள்ளது. டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான இளைஞரை பிரியாவும், Ex காதலியின் கணவர் & அவரின் 3 குழந்தைகளை ஹனுமானும் கொலை செய்துள்ளனர். திருமணம் செய்ய முடிவு செய்து ஐகோர்ட்டை அணுக, அவர்களுக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

error: Content is protected !!