News October 9, 2025

விஷமாக மாறிய மருந்து.. குழந்தையை கொன்ற துயரம்

image

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த திவ்யான்ஷ் (6) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தையின் தந்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை நாளொன்றுக்கு 4 முறை கொடுத்துள்ளார். மருந்து விஷமாக மாறி பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பட்டியலில், இக்குழந்தை பெயர் இல்லாததால், அரசின் ₹4 லட்சம் நிவாரணமும் கிடைக்கவில்லை.

Similar News

News October 9, 2025

தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

image

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒவ்வொரு பழத்திலும், பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. என்னென்ன பழங்களில் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும், சத்து நிறைந்த பழம், உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

News October 9, 2025

கைரேகை மூலம் UPI.. எப்படி செய்வது?

image

இனிமேல் UPI கட்டணங்களை PIN உள்ளீடு இல்லாமல், கைரேகை (Fingerprint) (அ) முக அடையாளம் (Face ID) மூலம் மட்டுமே பணம் செலுத்தும்முறை படிப்படியாக அமலுக்கு வரும். இதற்கு, முதலில், UPI செயலியை (PhonePe, GPay, Paytm) அப்டேட் செய்யவும். செயலியின் Settings-ல் சென்று பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric Authentication) அம்சத்தை இயக்கவும். பின்னர், அதை உங்கள் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் உடன் இணைக்கவும். SHARE IT.

News October 9, 2025

AP ஃபார்முலாவில் கூட்டணி ஆட்சி: கார்த்தி சிதம்பரம்

image

ஆட்சியில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகார லட்சியம் இல்லாவிட்டால், காங்., ஏன் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என கேள்வியெழுப்பினார். AP-யில் சந்திரபாபுவுக்கு மெஜாரிட்டி இருந்தும், கூட்டணி ஆட்சி நடத்துகிறார், ஆனால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தியும், காங்கிரஸுக்கு பங்கு தரவில்லை என்றார். அவரது கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!