News September 17, 2025

புரட்டாசி முதல் நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்!

image

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். அல்லது ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம். தீப, தூப ஆராதனை காட்டி, புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் சேர்ந்து கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வழிபட வேண்டும். SHARE.

Similar News

News September 17, 2025

PM மோடி நல்ல உடல் நலனுடன் வாழ வேண்டும்: CM ஸ்டாலின்

image

PM மோடியின் 75-வது பிறந்தநாளுக்கு CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலம், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் களத்தில் இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளபோதிலும், PM மோடிக்கு, CM ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது அரசியலில் நல்லதொரு முன்னெடுப்பு என இணையவாசிகள் கருத்து கூறி வருகின்றனர்.

News September 17, 2025

இன்று புரட்டாசி.. பெருமாளை இப்படி வழிபடுங்க!

image

புரட்டாசி மாதத்தில், வீட்டை சுத்தம் செய்து வைக்கவும். வீட்டில் உள்ள பெருமாள் படத்தை துடைத்து துளசி மாலை அணிவித்து, சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கற்கண்டு, பால், துளசி தீர்த்தம் ஆகியவற்றை பெருமாளுக்கு நைவேத்தியமாக படைத்து எளிமையாக வழிபடலாம். முடிந்தவர்கள் பானகம், சுண்டல், வடை, சர்க்கரை பொங்கல் போன்றவைகளையும் படைத்து வழிபடலாம். SHARE.

News September 17, 2025

காலாண்டு விடுமுறை.. பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு

image

காலாண்டு விடுமுறையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு NSS சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, NSS முகாம்களை 7 நாள்கள் நடத்த வேண்டும். இதில் பங்கேற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 1,000 மரக்கன்று, விதைகள் நட வேண்டும். மண் பாதுகாப்பு, மழைநீர் சேமிப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

error: Content is protected !!