News March 3, 2025
20 லட்சம் குழந்தைகள் உயிரை காப்பாற்றியவர் காலமானார்

‘தங்க கைகளை கொண்டவர்’ எனப் போற்றப்படும் ரத்த தானத்தில் சிறந்த ஜேம்ஸ் ஹாரிசன்(88) ஆஸ்திரேலியாவில் காலமானார். 18 வயதில் ரத்ததானம் செய்ய தொடங்கிய அவர், தன் 81 வயது வரை தொடர்ந்தார். இவரது ரத்தத்தில் Anti-D என்ற மிக அரிதான ஆன்டிஜென் உள்ளது. இது குழந்தைகளின் உயிரை பறிக்கும் ரத்தநோயை (HDFN) தடுக்கவல்லது. தன் ரத்த தானத்தின் மூலம், இவர் இதுவரை 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். RIP!
Similar News
News November 17, 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்ஷன்

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.
News November 17, 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்ஷன்

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.
News November 17, 2025
கனமழை வெளுத்து வாங்கும்… வந்தது அலர்ட்

பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நவ.24-ம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


