News July 13, 2024

செல்வப்பெருந்தகை பொம்மையை தொங்கவிட்டவர் கைது

image

தமிழகத்தில் பாஜக & காங்கிரசார் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே காங். தலைவர் செல்வப்பெருந்தகை உருவப் பொம்மையை மரத்தில் கட்டி தொங்கவிட்டனர். இது சர்ச்சையான நிலையில் வழக்கு பதிந்து விசாரித்த போலீசார் வி.கே.புரம் நகர பாஜக மகளிர் அணி செயலாளர் சந்திரகுமாரியின் கணவர் பாண்டி ராஜாவை நேற்று கைது செய்தனர், தொடர்ந்து பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News

News November 13, 2025

நெல்லை: வேன் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி

image

இன்று கன்னியாகுமரி சென்று விட்டு பாட்டபத்து பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று நாங்குநேரி அருகே வந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு வயது குழந்தை உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 7 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 13, 2025

நெல்லை: PF பிரச்சனைகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தீர்வு

image

நெல்லை மக்களே, உங்களின் PF கணக்குகளில் பிரச்சனை உள்ளதா? உங்க பேலன்ஸ் எவ்வளவுன்னு தெரியலையா?? இதற்காக அடிக்கடி PF லிங்கை திறந்து பாக்குறீங்களா இனி அது தேவை இல்லை! நமது தென்காசி மாவட்டத்திற்கு என பிரத்யேக 9489987157 வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். உங்க புகாரை நெல்லை PF அதிகாரிகளிடம் நேரடியாக பேசி தீர்வு காணலாம். SHARE பண்ணுங்க

News November 13, 2025

நெல்லை: ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

image

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பொட்டல் காலனியில் கடந்த 2017ம் ஆண்டு குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் என்பவரை கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் முடிவில் மாரிமுத்து, ஜெகதீஷ், சீதாராமன், ஈஷா மற்றும் சுடலைமாடி ஆகிய 5 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

error: Content is protected !!