News March 5, 2025
தாய்நாட்டுக்கு பெயர் வைத்தவர் காலமானார்

குழந்தைக்கு பெயர் வைக்கும் பாக்கியம் கூட பலருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியிருக்க, தன் தாய்நாட்டுக்கே பெயர் வைக்கும் வாய்ப்பு கிடைத்தால்… ஆம், 1960களில் ஆப்பிரிக்காவின் தாங்கனிகா, ஸான்சிபார் இணைந்து ஒரே நாடான போது, அதற்கு பெயர் வைக்க போட்டி நடத்தப்பட்டது. அப்போது இளைஞரான முகமது இக்பார் தார் வைத்த ‘தான்சானியா’ என்ற பெயர் ஏற்கப்பட்டது. அந்த பெருமைக்குரியவர் தன் 80-வது வயதில் பிரிட்டனில் காலமானார்.
Similar News
News March 6, 2025
பாலியல் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் அரசு தீவிரம்

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், இணையத்தில் ஆபாச படங்கள் பார்த்த மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு சைபர் பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News March 6, 2025
15 ஆண்டுகளுக்கு பின் பழைய முறையில் மரண தண்டனை

அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுட்டுக் கொல்லும் (Firing Squad) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2001ல் முன்னாள் காதலியின் பெற்றோரை கொலை செய்ததற்காக, பிராட் சிக்மோன் (67) என்பவருக்கு நாளை இத்தண்டனை வழங்கப்பட உள்ளது. 1608ல் அறிமுகமான இந்த தண்டனை முறை, கடைசியாக 2010ல் செயல்படுத்தப்பட்டது. 1980களுக்குப் பிறகு பெரும்பாலும் இதற்கு பதிலாக விஷ ஊசி செலுத்தும் முறையே பின்பற்றப்பட்டது.
News March 6, 2025
வங்கதேச ஸ்டார் வீரர் ஓய்வு அறிவிப்பு

வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.