News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News November 27, 2025
செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.
News November 27, 2025
இன்னும் சற்றுநேரத்தில் விஜய்யுடன் இணைகிறார்

விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணையவுள்ளதே இன்றைய ஹாட் டாபிக். மேலும், அவரது ஆதரவாளர்களான Ex MP சத்தியபாமா, அதிமுக முன்னாள் நிர்வாகிகள் கந்தவேல் முருகன், சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன், மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் தவெகவில் இணையவுள்ளனராம். இது விஜய்க்கான கொங்கு அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News November 27, 2025
இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே செக் பண்ணுங்க

மாரடைப்பு என்பது ஒரே நாளில் வருவதல்ல, மாறாக பல ஆரம்பகட்ட அறிகுறிகளை காட்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மார்பில் வலி, மூச்சுவிடுவதில் சிரமம், கை, முதுகு, வயிற்றுப்பகுதியில் நாள்பட்ட வலி அல்லது சிரமம், அளவுக்கு அதிகமாக வேர்வை வெளியாவது, தொடர் வாந்தி ஆகியவையே அந்த அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் ஹாஸ்பிடலுக்கு செல்லுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE.


