News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News November 21, 2025
ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. அப்போது, இந்திராணி வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக ED சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 21, 2025
மீனவ நண்பனாக திமுக அரசு செயல்படும்: CM ஸ்டாலின்

உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் உலக மீனவர் நாள் வாழ்த்துகள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவி, மீன்பிடித் துறைமுகங்கள் என மீனவர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக திமுக அரசு தொடரும் என்று கூறியுள்ளார்.
News November 21, 2025
அவர் தான் MS தோனி: மாஸ் காட்டிய சஞ்சு

மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சனை காண CSK ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தோனி குறித்து சஞ்சு பேசியது வைரலாகிறது. அங்கு (CSK) தனக்கு தெரிந்த நிறைய நண்பர்கள் இருக்கின்றனர், ஆனால் அங்கு ஒருவர் தனித்துவமாக இருக்கிறார், அவரை அனைவருக்கும் தெரியும், அவர் தான் MS தோனி என மாஸாக தெரிவித்துள்ளார். தோனி – சஞ்சு on field மாஸை பார்க்க யாரெல்லாம் வெயிட் பண்றீங்க?


