News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News November 23, 2025
மீண்டும் அதே தவறை செய்கிறாரா விஜய்?

கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், ஆளுங்கட்சி மீது பழிபோட்டார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சியில் மக்களுடனான சந்திப்பில் கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய விஜய், ’என்னை ஏன் தொட்டோம், என் மக்களை ஏன் தொட்டோம்னு வருந்துவீங்க’ என பேசியிருக்கிறார். இதனால், மீண்டும் PUNCH வசனம் பேசி கரூர் மேட்டரில் ஆளும் தரப்பை அவர் கைகாட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News November 23, 2025
ஏலியனுடன் பேசினாரா USA முன்னாள் அதிபர் புஷ்?

ஏலியன்கள் பற்றி தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் வெளியான ‘The Age of Disclosure’ ஆவணப்படம் மேலும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. அதில், முன்னாள் USA அதிபர் ஜார்ஜ் HW புஷ்-க்கு ஏலியன்கள் பற்றி தெரியும் என்று விண்வெளி இயற்பியலாளர் எரிக் டேவிஸ் தெரிவித்துள்ளார். 3 UFO விண்கலங்கள் பூமிக்கு வந்ததாகவும், ஏலியன்கள் CIA-வை தொடர்பு கொண்டதாகவும் புஷ் கூறியதாக டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
News November 23, 2025
ஏண்டா தவெகவை தொட்டோம் என ஃபீல் பண்ணுவீங்க: விஜய்

2026-ல் தவெக நிச்சயம் ஆட்சியமைக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறி வைத்தால் தவறாது; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்று எம்ஜிஆர் வசனத்தை சுட்டிக்காட்டினர். மேலும், இந்த எம்ஜிஆர் வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என திமுகவை சீண்டிய அவர், ஏண்டா விஜய்யை தொட்டோம்; விஜய்யுடன் இருப்பவர்களை தொட்டோம் என நினைக்கும் நிலை வரும் என்றும் எச்சரித்தார்.


