News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News November 15, 2025
பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.
News November 15, 2025
J.K.ரௌலிங் பொன்மொழிகள்

*உலகை மாற்றுவதற்கு நமக்கு மந்திரம் தேவையில்லை. நமக்குத் தேவையான எல்லாச் சக்தியையும் நாம் ஏற்கனவே நமக்குள் சுமந்து செல்கிறோம். *நாம் அனைவரும் நமக்குள் அதிசயங்களை வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. *அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனைதான் அடித்தளம். *நான் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன், பெரும்பாலும் இரண்டாவதை அடைவதற்கு முதலாவது வழிநடத்துகிறது.
News November 15, 2025
ஆணவக்கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

கிருஷ்ணகிரியில் சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகனை கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் நடந்த இந்த சம்பவத்தில், ஊருக்கு வந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுசயாவையும் தண்டபாணி வெட்டினார். அப்போது, தடுக்க வந்த தனது தாயார் கண்ணம்மாவையும் வெட்டினார். இதில், மகனும், தாயாரும் உயிரிழந்த நிலையில், மருமகள் அனுசயா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.


