News March 28, 2024
249 குழந்தைகள் பெற்ற அதிசய மனிதன்

பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
Similar News
News December 4, 2025
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
AVM சரவணன் காலமானார்.. முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி

நேற்று இரவு தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடிய AVM சரவணன், இன்று அதிகாலை 5 மணியளவில் காலமானார். இந்த செய்தியை கேட்டு துடித்துப்போன ரஜினி, முதல் ஆளாக அவரின் குடும்பத்தினரை தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். AVM ஸ்டுடியோவின் 3-வது தளத்தில் அவருக்கு இன்று மாலை 3.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் இன்னும் சற்றுநேரத்தில் அஞ்சலி செலுத்தவிருப்பதாக கூறப்படுகிறது.
News December 4, 2025
அரைநூற்றாண்டு கால தமிழ் சினிமாவின் மையப்புள்ளி!

AV மெய்யப்ப செட்டியாரின் மகனான <<18464432>>AVM சரவணன்<<>> இந்திய திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்தவர். MGR முதல் சூர்யா வரை அரைநூற்றாண்டு காலம் தமிழ் சினிமாவின் மையப்புள்ளியாக இயங்கியுள்ளார். சம்சாரம் அது மின்சாரம், முரட்டுக்காளை, முந்தானை முடிச்சு, சிவாஜி, அயன் போன்ற மறக்க முடியாத படங்கள் அவர் தயாரித்தவை. திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய அவர், 1986-ம் ஆண்டில் சென்னையின் ஷெரிப்பாகவும் பணியாற்றியுள்ளார்.


