News October 13, 2024
ரூ.500-க்கு மீன் கேட்டு மீனவரை தாக்கியவர் கைது

கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ் (44). மீனவரான இவர் இன்று கடலில் பிடித்து வந்த மீனை, அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின்(50) என்பவர் 500 ரூபாய்க்கு கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மீன் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. உடனே ஸ்டாலின் தனது உறவினர்களுடன் சேர்ந்து சுரேசை தாக்கினார். இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.
Similar News
News November 12, 2025
கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 12, 2025
கடலூர் மாவட்டத்தில் 19,908 பேருக்கு தேர்வு

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவ.15 & 16 ஆகிய 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாள்-1 தேர்வு மையங்களில் 4,191 பேரும், தாள்- 2 தேர்வு மையங்களில் 15,717 பேரும் என மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 பேர் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <


