News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல: ஒமர் அப்துல்லா

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்ச்சியாக கைது செய்யப்படுபவர்கள் அனைவரும் காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களாக உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் வாழும் அனைத்தும் முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல என்று அம்மாநில CM ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர், நாட்டின் அமைதியை குலைப்பதற்கென சிலர் உள்ளதாக குறிப்பிட்டார்.
News November 13, 2025
தமிழ் நடிகர் மரணம்.. நெஞ்சை உலுக்கிய சோகம்

‘கொள்ளி வைக்க ஒரு ஆள் வேண்டாமா?’ என்ற வார்த்தையின் வலியை அபிநய்யின் இறுதிச்சடங்கு உணர்த்திவிட்டது. இறுதிச்சடங்கு செலவை தாம் ஏற்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், உறவினர்கள் கூட இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லையாம். இப்படி ஒரு கொடுமையான முடிவா நமக்கு என்று அபிநய்யின் ஆத்மா எண்ணிய நேரத்தில், KPY பாலா உள்ளிட்ட சிலரின் முயற்சியால், தூரத்து உறவினர் ஒருவரை வரவழைத்து கொள்ளி வைத்துள்ளனர்.
News November 13, 2025
81.37% வாக்காளர்களுக்கு SIR படிவங்கள்: ECI

கடந்த நவ.4 முதல் தமிழகத்தில் SIR பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவ.13) மதியம் 3 மணி வரை 81.37% வாக்காளர்களுக்கு SIR கணக்கீட்டு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 5.21 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.


