News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 20, 2025
கெடா கறி அடுப்புல கெடக்க.. இத கொஞ்சம் கவனிங்க

காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்திய பின்பு, பட்டாசில் கைவைப்பதற்கு முன், சாப்பிட்டு போ என்று ஒரு குரல் கேட்கும். உடனே இட்லியும், குடல் குழம்பு (அ) கோழி குழம்பை சாப்பிட்டிருப்போம். மதியமும் கறி விருந்து தயாராக, இடையிடையே பலகாரங்களும் நம் வயிற்றை பதம் பார்க்கும். இந்நிலையில், இவற்றையெல்லாம் செரிப்பதற்கு தேவையான உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க
News October 20, 2025
ODI போட்டியில் நடந்த மிகப்பெரிய Error!

இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-யில் 176.5 Kph வேகத்தில் ஆஸி.,யின் மிட்சல் ஸ்டார்க் பந்து வீசியதாக கூறப்பட்டது. இதன்மூலம், அதிவேகமாக பந்துவீசிய சோயப் அக்தரின்(161.3Kph) சாதனையை முறியடித்தார் என பாராட்டப்பட்டார். ஆனால் உண்மையில் அவர் அவ்வளவு வேகமாக பந்து வீசவில்லையாம். இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த தவறு எனவும் அவர் 140.8 kmph வேகத்தில்தான் பந்துவீசினார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
தீபாவளிக்கு மட்டுமே திறக்கும் கோயில் தெரியுமா?

நாட்டில் விசித்திரமான கோயில்களுக்கு பஞ்சமே இல்லை. அப்படியான ஒரு கோயில், கர்நாடகாவின் ஹாசன் நகரில் உள்ள ஹாசனம்பா துர்கா தேவி கோயில். இக்கோயில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படுகிறது. 10 நாள்களுக்கு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆனால், 7 நாள்களுக்கு மட்டுமே மக்கள் துர்கையை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நேரத்தில் தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் நல்லது என நம்பப்படுகிறது.