News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 30, 2025
திமுக வாக்குறுதி.. நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்!

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் திமுக தரப்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக வாக்குறுதிகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக புதிய செயலியை (App) நாளை CM ஸ்டாலின் அறிமுகம் செய்யவுள்ளார்.
News December 30, 2025
மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு.. வந்தாச்சு அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என <<18565227>>CM ஸ்டாலின்<<>> ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பு வரு மார்ச் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை ₹1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது, 1.30 கோடி மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News December 30, 2025
பாரதியின் கனவு PM மோடியால் நிறைவேறுகிறது: CPR

ராமேஸ்வரத்தில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி CPR உரையாற்றினார். அதில், தர்மத்தின்படி வாழ வேண்டும் என்ற உயர்ந்த தத்துவம் தான் நம்மை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பாரதி கண்ட கனவு PM மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை அவர் உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். காசி – ராமேஸ்வரம் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என்றும் கூறினார்.


