News April 12, 2025
மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News September 17, 2025
குறையும் Big Screen தியேட்டர் மோகம்!

இருட்டு ரூமில், பலருடன் அமர்ந்து சிரித்து, அழுது, கைத்தட்டி- விசிலடித்து கொண்டாடி படம் பார்த்த உணர்வை மக்கள், வேண்டாம் என ஒதுக்க தொடங்கிவிட்டனர். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படம் என்றாலும், கொஞ்சம் சுமாராக இருந்தாலும், OTT பக்கம் ரசிகர்கள் சென்றுவிடுகின்றனர். இதற்கு டிக்கெட் விலை, படங்களின் தரம் என பல காரணங்களும் உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க.. ரசிகர்கள் தியேட்டர் அனுபவத்தை தவறவிடுகிறார்களா?
News September 17, 2025
அமித்ஷாவிடம் EPS ஒரு மணி நேரம் பேசியது என்ன?

சசிகலா, OPS, TTV, செங்கோட்டையன் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்துதான் அமித்ஷாவிடம் தனியாக EPS ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசியிருக்கிறார். இதில், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை திட்டவட்டமாக EPS சொல்லிவிட்டாராம். அதை அமைதியாக கேட்டுக்கொண்ட அமித்ஷா, கூட்டணி கட்சிகளின் பலம் – பலவீனம், கட்சிக்குள் அதிருப்தியில் இருக்கும் மற்றவர்களை சமாதனம் செய்வது உள்ளிட்ட பல ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறாராம்.
News September 17, 2025
மூலிகை: மருத்துவ குணங்கள் அடங்கிய செங்காந்தள்!

சித்த மருத்துவத்தில் செங்காந்தள் செடி பல்வேறு பிரச்னைக்கு பயன்படுகிறது.
*செங்காந்தள் செடியின் வேருடன் குப்பைமேனி வேர், நீலி வேர் சேர்த்து அரைத்து, அரை நெல்லிக்காய் அளவு 3 நாள்கள் சாப்பிட்டால், பாம்பு- தேள் கடி விஷம் இறங்கும்.
*பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி இறங்காமல் அவதிப்படும் பெண்களுக்கு பச்சை செங்காந்தள் வேர்க்கிழங்கை அரைத்து அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் போன்ற இடங்களில் தடவுவார்கள். SHARE.