News April 12, 2025

மரங்களின் நாயகன் மறைவு: PM மோடி இரங்கல்

image

<<16071420>>‘வனஜீவி’ ராமைய்யாவின் மறைவிற்கு<<>> PM மோடி தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான மரங்களை பாதுகாக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த ராமைய்யா, இயற்கையின் மீது ஆழ்ந்த காதல் கொண்டவர் என்று கூறியுள்ள மோடி, இந்த பூமிப்பந்தை பசுமைக் கோளாக மாற்ற இவரின் வாழ்க்கை இளைஞர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கும் என்று கூறி, அன்னாரது குடும்பத்தினருக்கு தன் இரங்கலை X-ல் பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 10, 2025

அக்டோபர் 10: வரலாற்றில் இன்று

image

*1906–எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் பிறந்தநாள். *1954–நடிகை ரேகா பிறந்தநாள். *1973–இயக்குநர் ராஜமௌலி பிறந்தநாள். *1974– தமிழறிஞர் மு. வரதராசன் மறைந்த நாள். *1987–விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் போர் தொடக்கம். *1991-நாகப்பட்டினம் மாவட்டம் உருவானது. *2015–ஆச்சி மனோரமா மறைந்த நாள். *2022–வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைந்த நாள்.

News October 10, 2025

டிரம்புக்கு நோபல் பரிசு.. வைரலாகும் போட்டோ

image

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்கப்பட்டது போல் இஸ்ரேல் PM நெதன்யாகு SM-ல் பதிவிட்ட போட்டோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் அமைதி திட்டத்தின் அடிப்படையில் பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியிருந்த நிலையில், நெதன்யாகு இவ்வாறு பதிவிட்டுள்ளார். முன்னதாக தனக்கு நோபல் பரிசு வழங்குவதை தவிர்க்க ஒரு காரணம் வைத்திருப்பார்கள் என டிரம்ப் கூறியிருந்தார். இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.

News October 10, 2025

TVK மீது பொய் வழக்கு போட்டு மிரட்டல்: அதிமுக

image

தவெக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டும் செயல்களில் திமுக அரசு ஈடுபடுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தினால், ஜனநாயகத்தை காக்கும் நோக்கில் அதற்கு எதிராக அதிமுக குரல் கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கரூர் விஷயத்தில் சிபிசி விசாரணைக்கு உத்தரவிட CM ஸ்டாலின் மறுப்பு ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!