News January 24, 2025
TN அரசின் தீர்மானம் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், பாஜக அரசின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து மூலம், பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 25, 2025
தவெகவில் இணைகிறாரா அதிமுக EX எம்பி?

அதிமுக EX MP கே.சி.பழனிசாமியுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2018-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட இவர், EPS-ஐ தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். 1984-ல் MGR-ன் ஆட்சியில் MLA-வாக(காங்கேயம் தொகுதி) இருந்த இவருக்கு இன்றளவும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கணிசமான செல்வாக்கு உள்ளது. அதனால், அவரை கட்சியில் இணைக்க தவெக தரப்பு முயல்வதாக கூறப்படுகிறது.
News November 25, 2025
14 வகை கேன்சரை அழிக்கும் ஒரே தடுப்பூசி!

ரஷ்யா உருவாக்கியுள்ள கேன்சர் தடுப்பூசியை முதல் நாடாக வியட்நாம் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. Pembroria என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, 14 வகையான கேன்சரை அழிக்க உதவுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலையும் குறைவு என்பதால், பலர் இதன்மூலம் பயனடையலாம். இந்தியாவில் இந்த மருந்து தற்போது டெஸ்டிங்கில் உள்ளதால், கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 25, 2025
இன்னும் ஒரு மணி நேரத்தில்.. ரெடியா இருங்க

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசன டிக்கெட் (₹300) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. அறைகளுக்கான முன்பதிவு மாலை 3 மணிக்கு தொடங்கும். ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


