News January 24, 2025
TN அரசின் தீர்மானம் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், பாஜக அரசின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து மூலம், பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
மழைக்காலத்தில் மட்டுமே பாக்.,-க்கு நீர்: மத்திய அரசு

இந்தியாவின் சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து, பருவமழை காலத்தை தவிர வேறு எந்த காலத்திலும் PAK-க்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே நீர் வெளியேற்றப்படுவதாக குறிப்பிட்டார்.
News December 5, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NDA-வின் CM வேட்பாளராக EPS இருக்கும்வரை அமமுக, அந்தக் கூட்டணியில் இணையாது என TTV தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பேசிய அவர், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் துரோகம்(EPS) வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதிமொழியாக எடுத்துள்ளதாகவும் கூறினார். உங்கள் கருத்து?
News December 5, 2025
நீங்கள் இதில் எந்த இடத்தில் இருக்கீங்க?

இந்திய மக்களின் வருமானம் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இதில், எத்தனை சதவீத மக்கள் எந்த வருமான பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிஞ்சுகோங்க. SHARE.


