News May 15, 2024
ரசிகர்களின் அன்பு நெகிழ்ச்சியைத் தருகிறது

RCB-க்கு எதிரான போட்டியில் தான் விளையாடி இருந்தால், ப்ளே-ஆஃப் செல்லும் வாய்ப்பு அதிகரித்திருக்கும் என டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். போட்டிக்கு பின் பேசிய அவர், நிறைய நம்பிக்கையுடன் இந்த சீசனில் களமிறங்கினோம் என்றும், வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் நினைத்ததை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும் கூறினார். மேலும், ரசிகர்கள் காட்டிய அன்பு நெகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News November 27, 2025
ஆதார் குடியுரிமைக்கான சான்று கிடையாது: SC

ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருத முடியாது என SIR-க்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையில் SC கருத்து தெரிவித்துள்ளது. ஆதார் என்பது குடிமக்கள் சலுகைகளை பெறுவதற்கான ஆவணம் மட்டுமே. ஒருவருக்கு ரேஷன் வாங்குவதற்காக ஆதார் வழங்கினால், வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், வரும் டிச.1-க்குள் TN அரசு தாக்கல் செய்த மனுவிற்கு ECI விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
News November 27, 2025
2026-ல் சீமான் போட்டியிடும் தொகுதி இதுவா?

2026 சட்டமன்ற தேர்தலில் சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்குடியில் நாதக சார்பில் இன்று நடைபெறும் மாவீரர் நாள் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்டு சீமான் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்.. HAPPY NEWS

அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதம் ‘காக்கா முட்டை’ படத்தை ஒளிபரப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஒளிபரப்புக்கான லிங்க் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படம் திரையிடும் பணிகளை ஒருங்கிணைக்க பொறுப்பாசிரியரை நியமிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களே, படம் பார்க்க ரெடியா!


