News April 6, 2024
புத்திசாலித்தனமாக தங்கையை பாதுகாத்த சிறுமி

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிறுமிகள் அலெக்ஸா கருவியின் உதவியுடன் தப்பித்துள்ளனர். நிகிதா என்ற சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த குரங்குகள், சமயலறையில் இருந்த பொருட்களை அங்கும் இங்குமாக வீசத் தொடங்கியுள்ளன. இதனால் சிறுமியின் தங்கை பயந்துபோன நிலையில், புத்திசாலித்தனமாக யோசித்த நிகிதா, அலக்ஸாவை குரைக்கக் கூறியுள்ளார். அலக்ஸாவில் இருந்து வந்த நாயின் சத்தத்தை கேட்ட குரங்குகள் அங்கிருந்து பயந்து ஓடியுள்ளன.
Similar News
News March 26, 2026
இன்று மறந்தும் இவற்றை செஞ்சிடாதீங்க..

ராமப்பிரானின் பிறந்த நாளான இன்று மறந்தும் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது *வெங்காயம், பூண்டு, இறைச்சியை தவிர்க்கவும் *இன்றைய தினம் தலைமுடியை வெட்டுவதையோ அல்லது சவரம் செய்வதையோ தவிர்க்கவும் *ராம நவமி அன்று மற்றவர்களை விமர்சிக்கவோ, தவறாக பேசவோ கூடாது. மனதில் ராம நாமத்தை நிலைநிறுத்துங்கள் *உங்கள் துணையை எந்த ஒரு காரியத்திற்கும் ஏமாற்றாதீர்கள். SHARE IT.
News March 26, 2026
FLASH: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2 படகுகள், வலைகள், மீன்கள் உள்ளிட்ட உடைமைகளையும் கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக மீனவர்கள் கைது பிரச்னை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் அட்டூழியம் நடப்பதாக மீனவர்களின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
News March 26, 2026
நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை: சீமான்

திருடர்களிடம் ஆட்சியை கொடுத்ததால், திருடிய காசில் ₹1,000 ₹2,000 பங்கு கொடுக்கிறான் என சீமான் விமர்சித்துள்ளார். கல்வி, மின்சாரம், மருத்துவத்தை திமுக இலவசமாக்காதது ஏன் என கேட்டுள்ளார். இலவசம் கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி, வடமாநிலத்தவருக்கு வேலை வழங்குவதாகவும், வட மாநிலத்தவருக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கினால், நாட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்றும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


