News April 21, 2025
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு கூடும் சட்டப்பேரவை!

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
Similar News
News December 2, 2025
85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி.. சீமான் காட்டம்

முதுநிலை ஆசிரியர் தேர்வில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்ததுதான், 60 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழை வளர்த்த முறையா என்று சீமான் விமர்சித்துள்ளார். தேர்வெழுதிய பல இளைஞர்கள் தமிழ் சரிவர தெரியாமலேயே பட்டம் பெற்றது கொடுமை என்றும் அவர் கூறியுள்ளார். இதை சரிசெய்திட பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பாடத்தை கட்டாயம் கற்பித்து, தேர்வு நடத்துவதை அரசு உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது

11 பேர் உயிரிழந்த டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளதாக NIA தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் பல டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், அல் பலா பல்கலை. நிறுவனர் ஜவாத் அகமதை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News December 2, 2025
கலிலியோ பொன்மொழிகள்!

*எல்லா உண்மைகளையும் அவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் புரிந்து கொள்வது எளிமையானது. அவற்றைக் கண்டுபிடிப்பதே முக்கியமான விஷயம். *அளவிடக்கூடியதை அளவிடுங்கள். அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள். *உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம். *அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே. ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவே. *உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.


