News April 21, 2025
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு கூடும் சட்டப்பேரவை!

3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
Similar News
News October 19, 2025
ஆதார் மூலம் ₹50,000 பரிசு

ஆதார், தேசிய அளவிலான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் முதல் பரிசு ₹50,000, 2-ம் பரிசு ₹30,000, 3-ம் பரிசு ₹20,000. ஆதாரை மையமாக கொண்டு ஒரு கிரியேட்டிவான Mascot-ஐ உருவாக்க வேண்டும். அது, மக்கள் ஈஸியாக புரிந்து கொள்வதுடன் ஆதார் அமைப்பின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கிய Mascot-ஐ <
News October 19, 2025
CPR, ராமதாஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களாக CM, EPS, விஜயகாந்த், ரஜினிகாந்த், விஜய், சசிகலா உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
News October 19, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹1000 .. வெளியானது ஹேப்பி நியூஸ்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு டிச.15 முதல் ₹1000 வழங்கப்படும் என உதயநிதி அண்மையில் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கிராம வாரியாக பயனாளிகளின் எண்ணிக்கை & விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள் இறுதி செய்ய தொடங்கியுள்ளனர். இதுவரை 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியான பெண்களின் லிஸ்ட் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.