News April 29, 2025

இன்றுடன் சட்டப்பேரவை நிறைவடைந்தது..

image

சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மார்ச் 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில், இலவச பட்டா விதிகளில் திருத்தம், கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் மசோதா உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்ற நிலையில், இன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 29, 2025

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய்-ஐ நியமனம் செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் அவர், நவ., மாதம் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.

News April 29, 2025

தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை

image

2018-ல் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த், ஜாமினில் வெளியே வந்து தாயை கொலை செய்ததாக கைதானார். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் தஷ்வந்த் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால் அவரை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு SC இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

News April 29, 2025

ட்ரம்ப் எதிர்ப்பால் வென்ற மார்க் கார்னி

image

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி வெற்றி பெற்றதற்கு, அவருடைய தீவிர ட்ரம்ப் எதிர்ப்பே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு, கனடாவை USA-வின் மாகாணம் என்றும் அன்றைய PM ட்ரூடோவை கவர்னர் என்றும் அழைத்தார். ட்ரம்ப்பின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையை பெரும்பாலான கனடியர்கள் விரும்பவில்லை என்பது தேர்தல் முடிவில் வெளிப்பட்டுள்ளது. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வாரா ட்ரம்ப்?

error: Content is protected !!