News March 4, 2025
சீமானுக்கு நிம்மதி பரிசளித்த அந்த வழக்கறிஞர்

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சீமான் தரப்பு வழக்கறிஞர் நிர்ணிமேஷ் துபே. அதிக கட்டணம் வசூலிக்கும் துபே, வட இந்தியாவின் பேமஸான வழக்கறிஞர்களில் ஒருவர். ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தவர். பாஜகவிற்காக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
Similar News
News December 1, 2025
காங்., மாநில பொதுச் செயலர் கைது

பணமோசடி வழக்கில் காங்., கட்சியின் மாநில பொதுச் செயலர் தளபதி பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். சிவலிங்கா சிட் ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த அவர், பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னையில் ஹோட்டலில் தலைமறைவாக இருந்த அவரை, முற்றுகையிட்டு பணம் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாஸ்கரை கைது செய்தனர்.
News December 1, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹13,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹4 உயர்ந்து ₹196-க்கும், கிலோவுக்கு ₹4,000 உயர்ந்து ₹1,96,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவ.29-ம் தேதி (சனிக்கிழமை) வெள்ளி விலை ₹9000, டிசம்பர் மாதத்தில் முதல் நாளான இன்று ₹4000 என 2 நாள்களில் மொத்தம் ₹13,000 அதிகரித்துள்ளது.
News December 1, 2025
நெல்கொள்முதல் விவகாரம்: திமுக நோட்டீஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத உயர்வு, 100 நாள் வேலை திட்ட நிதி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


