News March 4, 2025

சீமானுக்கு நிம்மதி பரிசளித்த அந்த வழக்கறிஞர்

image

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சீமான் தரப்பு வழக்கறிஞர் நிர்ணிமேஷ் துபே. அதிக கட்டணம் வசூலிக்கும் துபே, வட இந்தியாவின் பேமஸான வழக்கறிஞர்களில் ஒருவர். ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தவர். பாஜகவிற்காக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.

Similar News

News November 24, 2025

துபாய் ஏர் ஷோ.. அமெரிக்க கேப்டன் அதிருப்தி

image

தேஜஸ் விமான விபத்தில் நமன்ஷ் சியாலுக்கு உயிரிழந்த பிறகும் துபாய் ஏர் ஷோ தொடர்ந்தது குறித்து அமெரிக்க F-16 குழுவின் கேப்டன் டெய்லர் ஹிஸ்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நமன்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்களது குழு இறுதி சாகசத்தை நிகழ்த்தாமல் வெளியேறியதாக அவர் பேசியுள்ளார். விபத்தை தொடர்ந்து, ஏர் ஷோ தொடரப்பட்டு அடுத்தடுத்த சாகசங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 24, கார்த்திகை 8 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி ▶சிறப்பு: சதுர்த்தி, பதரி கவுரி விரதம். ▶வழிபாடு: சிவன் கோயிலில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

News November 24, 2025

பன்னாட்டு தலைவர்களுடன் PM மோடி சந்திப்பு

image

ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கனடா, ஜப்பான், இத்தாலி நாடுகளின் PM-கள், பிரேசில், தெ.ஆப்பிரிக்காவின் அதிபர்கள் ஆகியோருடன் PM மோடி தனித்தனி சந்திப்பை நடத்தினார். அப்போது, உலக அமைதி, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, காலநிலை மாற்றம், எல்லை பாதுகாப்பு, யுரேனியம் விநியோகம் உள்ளிட்ட பல ஒத்துழைப்புகள் குறித்து மோடி ஆலோசித்துள்ளார்.

error: Content is protected !!