News March 15, 2025
இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் திருவிழா ஆரம்பம்

கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது ஐபிஎல் 2025 தொடர். வருகிற 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன. சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் 23ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Similar News
News March 15, 2025
WPL: இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்?

இன்று நடைபெறும் WPL இறுதிப் போட்டியில் DC vs MI அணிகள் மோதுகின்றன. இம்முறை கோப்பை வெல்லும் முனைப்பில் டெல்லியும், இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் ஆர்வத்தில் மும்பையும் உள்ளது. ஆல்ரவுண்டர்களான நாட் சீவர், ஹெய்லி மேத்யூஸ் ஆகியோருடன் MI அணி வலுவாக உள்ளது. இந்த சீசனில் மும்பையை டெல்லி ஆதிக்கம் செலுத்தியது. போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. JioHotstar, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரலையில் காணலாம்.
News March 15, 2025
இன்றைய பொன்மொழிகள்!

▶ கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது. ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீ தாங்கித் தாங்கி வலுவைப் பெறு. ▶போட்டியும், பொய் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே. ▶விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது கேடு – பேரறிஞர் அண்ணா.
News March 15, 2025
பட்ஜெட் அதிருப்தி – போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஜாக்டோ ஜியோ அமைப்பின் நீண்ட கால கோரிக்கை. பட்ஜெட்டில் அதுதொடர்பாக அறிவிப்பு எதுவும் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்த அவர்கள், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 23-ல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மார்ச் 30-ல் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.