News August 10, 2024

காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை

image

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹங்கேரி வீராங்கனை பெர்னாடெட் நாகியை 12 – 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் நடைபெற உள்ள காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடெட் கைஸியை எதிர்கொள்கிறார்.

Similar News

News January 6, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி

image

கிளியனூர் அருகே, அருவாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29), நீண்ட நாட்களாகத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். தை மாதம் பெண் பார்ப்பதாகக் குடும்பத்தினர் கூறியும், மனவேதனையில் இருந்த அவர் கடந்த 3-ம் தேதி விஷம் அருந்தினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 6, 2026

திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

image

திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கில் அரசின் மேல் முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கில் அணுகியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் எனவும் நீதிபதிகள் பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும், மலையில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

News January 6, 2026

மோடியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து: சுப்பிரமணிய சுவாமி

image

டிரம்ப்பின் ஆதரவாளராக இருக்கும் மோடி, இந்திய ஜனநாயகத்திற்கும், பாஜகவிற்கும் மிகப்பெரிய ஆபத்தாக உள்ளதாக அக்கட்சியின் Ex MP சுப்பிரமணிய சுவாமி விமர்சித்துள்ளார். அதனால், மோடியை PM பதவியில் இருந்து ஓய்வு பெற வைத்து, பாஜகவின் தலைமை ஆலோசனை குழுவில் (Marg Darshan Mandal) அமரச் சொல்வது குறித்து RSS அமைப்பும் பாஜகவின் பொதுக்குழுவும் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?

error: Content is protected !!