News April 14, 2024

5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

image

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News November 26, 2025

சேலம்: கலைத் திருவிழாவில் 5138 பேர் பங்கேற்பு!

image

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் நாளை மாநில அளவிலான கலைத் திருவிழா தொடங்க உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 5,138 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அமைச்சர் மற்றும் ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று இந்த போட்டியை தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

News November 26, 2025

சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் பரபரப்பு திருப்பம்

image

இன்று ‘சென்யார்’ புயல் உருவாகவுள்ள நிலையில், மறுபுறம் தமிழக அரசியலிலும் புதிய புயல் உருவாகியுள்ளது. ஆம்! தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் (11 மணியளவில்) அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று மாலையே விஜய்யை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News November 26, 2025

மும்பை தாக்குதலில் 166 பேர் மரணம்.. தீராத சோகம்

image

இந்தியாவின் இதயத்தை கிழித்த 26/11 மும்பை தாக்குதல் நடந்த தினம் இன்று. 2008 நவம்பர் 26-ல், LeT அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல்வழியாக மும்பைக்குள் நுழைந்து CST ரயில் நிலையம் உள்பட பல இடங்களை கைப்பற்றினர். அவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேரின் உயிர் அநியாயமாக பறிபோனது. 60 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த தாக்குதலில், கடைசியில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார்.

error: Content is protected !!