News April 14, 2024
5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News November 19, 2025
பள்ளி செல்லும்போது மாணவி கொலை.. தமிழகத்தில் அதிர்ச்சி

பள்ளிக்கு செல்லும் வழியில் +2 மாணவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த மாணவியை மறித்த சேராங்கோட்டையை சேர்ந்த இளைஞர் முனியராஜ் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 19, 2025
தமிழகத்தை பழிவாங்கும் பாஜக அரசு: CM ஸ்டாலின்

மதுரைக்கும், கோவைக்கும் “NO METRO” என மத்திய அரசு நிராகரித்துள்ளதாக CM ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் சிறிய மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல. பாஜகவை தமிழர்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என சாடிய அவர், மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.
News November 19, 2025
தமிழ் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து கவனம் பெற்றவர் துளசி. இவர் சர்க்கார், சுந்தரபாண்டியன், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அம்மா கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். இந்நிலையில், வரும் டிசம்பர் 31 முதல் சினிமாவில் இருந்து ஓய்வு பெற போவதாக அவர் அறிவித்துள்ளார். 1970-களில் தொடங்கிய அவரது சினிமா பயணம், 2025-ல் முடிவடைந்துள்ளது.


