News April 14, 2024

5,563 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய வருமான வரித்துறை

image

2023-24 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையில் பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் நிலுவையில் உள்ளதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. இதையடுத்து சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உட்பட 5,563 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், பிடித்தம் செய்த தொகையை விரைவில் செலுத்தி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News November 25, 2025

விழுப்புரம்: துக்க நிகழ்வுக்கு சென்ற பெண் மர்ம முறையில் சாவு!

image

விழுப்புரம்: அம்மாகுளத்தைச் சேர்ந்த பார்வதி (27), கணவர் மதியழகனை (30) பிரிந்து, தனது ஆண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த வாரம் தனது கணவரின், தந்தையின் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளார் பார்வதி. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் பார்வதி இறந்து கிடந்தார். இது குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 25, 2025

உங்க வேலையை இங்க காட்டாதீங்க: பிரேமலதா

image

தேமுதிக கொடி, பேனரை அகற்றிவிட்டால் கூட்டம் நடக்காது என்பது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என்பதை போல இருப்பதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். கோவையில் மட்டும் இந்த அராஜகம் நடப்பதாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் மறைமுகமாக செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 25, 2025

உங்க வேலையை இங்க காட்டாதீங்க: பிரேமலதா

image

தேமுதிக கொடி, பேனரை அகற்றிவிட்டால் கூட்டம் நடக்காது என்பது சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நடக்காது என்பதை போல இருப்பதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். கோவையில் மட்டும் இந்த அராஜகம் நடப்பதாக கூறிய அவர், தேமுதிகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று அவர் மறைமுகமாக செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!