News March 29, 2024
அந்த சம்பவத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Similar News
News November 27, 2025
நடிகை அம்பிகா வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News November 27, 2025
USA-வில் ஆப்கானியர்கள் குடியேற்றத்துக்கு தடை!

USA வெள்ளை மாளிகை அருகே <<18400484>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்திய நபர் ஆப்கனை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. இதன் எதிரொலியாக ஆப்கனை சேர்ந்த அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக USCIS கூறியுள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலை ‘பயங்கரவாத செயல்’ எனக்கூறி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
வெல்வோம் 200, படைப்போம் வரலாறு: உதயநிதி

பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் DCM உதயநிதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது பிறந்தநாள் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய உதயநிதி, SIR திட்டத்தில் வாக்குகளை உறுதி செய்யும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு எனவும், இதுவே தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்றும் கூறினார்.


