News March 29, 2024

அந்த சம்பவத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

image

மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Similar News

News December 8, 2025

எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயமா? நயினார்

image

திமுக ஆட்சி அமைந்ததும் குறைந்தபட்சம் 100 நாள்கள் சட்டசபை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே செய்தீர்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 40 நாள்கள் கூட சட்டசபை நடைபெறாத நிலையில், நாடு போற்றும் நல்லாட்சி என விளம்பர நாடகங்களை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயந்து சட்டசபையை சரிவர கூட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 8, 2025

PAK-ஐ கூடுதலாக அடித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங்

image

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு இன்னும் கூடுதலான இழப்புகளை நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நமது படைகள் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான இழப்புகளை மட்டும் ஏற்படுத்தின. இந்த வெற்றிக்கு ராணுவம், நிர்வாகம், எல்லைப்புற மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். இந்த பன்மைத்துவம் தான் உலகில் நம்மை தனித்துவமாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

₹500 கோடி கொடுத்தால் CM தான் ஆக முடியுமா?

image

₹500 கோடி கொடுத்தால் பஞ்சாப் CM ஆக முடியும் என அம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். ஆனால், பணம் கொடுப்பவர்கள் தான் CM வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தனது கணவரை CM வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அவர் அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்றும் கவுர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!