News November 11, 2024

ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை!

image

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு நவ.13, 20ல் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. 48 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடக்கவுள்ள நிலையில், சுமார் 2.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளது. இந்த 48 தொகுதிகள் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது. வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் அன்றைய தினம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 8, 2025

ஹஜ் யாத்ரீகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம்

image

ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு வழங்கப்படும், ‘நுஸுக்’ அட்டைகளில் புதிய விதிகளை சவுதி ஹஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு சவுதி வந்த உடன் அட்டை வடிவிலும் வழங்கப்படும். இதை, ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும் யாத்ரீகர்கள் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 8, 2025

எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயமா? நயினார்

image

திமுக ஆட்சி அமைந்ததும் குறைந்தபட்சம் 100 நாள்கள் சட்டசபை நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே செய்தீர்களா என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 40 நாள்கள் கூட சட்டசபை நடைபெறாத நிலையில், நாடு போற்றும் நல்லாட்சி என விளம்பர நாடகங்களை நடத்துவதுதான் திமுக அரசின் சாதனையா? எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயந்து சட்டசபையை சரிவர கூட்டவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 8, 2025

PAK-ஐ கூடுதலாக அடித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங்

image

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு இன்னும் கூடுதலான இழப்புகளை நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நமது படைகள் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான இழப்புகளை மட்டும் ஏற்படுத்தின. இந்த வெற்றிக்கு ராணுவம், நிர்வாகம், எல்லைப்புற மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். இந்த பன்மைத்துவம் தான் உலகில் நம்மை தனித்துவமாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!