News May 28, 2024
பெற்ற மகளை பகடையாக்கிய பயங்கரம்

சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நதியாவை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளை வைத்து மற்ற மாணவிகளுக்கு வலை வீசியதாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகளிடம் பக்குவமாகப் பேசி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் நதியா போலீசிடம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
மூத்த தலைவர் மறைவு..CM ஸ்டாலின் இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதாகர் ரெட்டி தனது வாழ்க்கையை மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்ததாக குறிப்பிட்ட அவர், அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்க்கை தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
News August 23, 2025
2-வது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டா?

விவாகரத்து (அ) முதல் மனைவி இறந்தால் மட்டுமே, 2-வது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டு. ஆனால், சட்டப்பூர்வ பிரிவு இன்றி 2-வது திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் உரிமை உண்டு. இதில், முதல் மனைவியின் குழந்தைக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், 2-வது திருமணம் செய்யும் பெண்ணுக்கு, அதற்கு முன்பாக குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு 2-வது கணவரின் சொத்தில் உரிமை கிடையாது.
News August 23, 2025
Missed Call மூலம் PF பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி?

UAN எண் கைவசம் இல்லையா? பிரச்னையே இல்லை, மிஸ்டு கால் மூலமும் பிஎஃப் பேலன்ஸை நீங்கள் அறியலாம். இதற்கு, உங்கள் பிஎஃப் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். ஒரே ரிங்கில் கால் கட் ஆகிவிடும். இதனை அடுத்து உங்களுக்கு ஒரு SMS வரும் அதில் உங்களுடைய பிஎஃப் பேலன்ஸ் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். SHARE IT.