News April 15, 2024
30 மாதங்களில் இல்லாத உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட குறிப்பில், “ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245.3 கோடி டாலரை எட்டியது” எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
Kidney Stone போகணுமா? Roller Coaster-ல போங்க!

பெரிய ரோலர் கோஸ்டர்களில் சவாரி செய்யும்போது 5mm-க்குள் உள்ள கிட்னி கற்கள் வெளியேறுவதாக 2016-ல் மிச்சிகன் ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரோலர் கோஸ்டரின் முன் பக்க இருக்கையில் உட்காருவதால் வெறும் 17% கற்கள் தான் வெளியேற வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் கடைசி சீட்டில் அமரும்போது 64% கற்கள் வெளியேறக்கூடும் என்கின்றனர். புவி ஈர்ப்பு விசையால் இது நடப்பதாக கூறுகின்றனர். SHARE.
News November 9, 2025
வரலாறு படைத்தார் மெஸ்ஸி

கால்பந்து அரசன் மெஸ்ஸி, 400 Assists கொடுத்த 2-வது வீரர் என்ற வரலாற்றை படைத்தார். ஒரு பிளேயர் பாஸ் செய்யும் பாலை வாங்கி மற்றொரு பிளேயர் அதை கோல் போட்டால், பாலை பாஸ் செய்த பிளேயருக்கு 1 Assist கிடைக்கும். அவ்வகையில், இதுவரை அதிக Assists (404) உடன் முதலிடத்தில் உள்ளார் மறைந்த ஹங்கேரி வீரர் ஃபெரென்க் புஸ்காஸ். மெஸ்ஸிக்கு போட்டியாக பார்க்கப்படும் ரொனால்டோ 287 Assists மட்டுமே கொடுத்துள்ளார்.
News November 9, 2025
மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்: TN அரசு

TN அரசு, ஒருங்கிணைந்த கட்டட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, குடியிருப்புகள், வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 750 சதுர மீட்டர்(SM) குடியிருப்புகளுக்கும், 300 SM வணிக இடங்களுக்கும் கூட இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. EV வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


