News April 15, 2024

30 மாதங்களில் இல்லாத உயர்வு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட குறிப்பில், “ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245.3 கோடி டாலரை எட்டியது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 17, 2025

TVK 2-வது மாநாடு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

image

தவெக-வின் 2-வது மாநில மாநாடு வரும் 21-ம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாநாடு நடைபெறும் இடத்தில் குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்தம் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவசர மருத்துவ வசதிக்காக டிரோன் மூலம் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தை என்.ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.

News August 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 17 – ஆவணி 1 ▶ கிழமை: ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சுன்யதிதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை.

News August 17, 2025

இல.கணேசன் இடத்துக்கு அஜய் குமார் பல்லா

image

நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வந்த இல.கணேசன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மணிப்பூர் கவர்னரான அஜய் குமார் பல்லா கூடுதல் பொறுப்பாக நாகாலாந்து கவர்னர் பதவியையும் சேர்த்து வகிப்பார் என ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.

error: Content is protected !!