News March 26, 2025
நாயகன் மீண்டும் வர்றார்.. இந்தியா வரும் மெஸ்ஸி!

ஃபுட்பால் லெஜண்ட் மெஸ்ஸி வரும் அக்டோபரில் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் நடைபெறும் 2 ஃப்ரண்ட்லி போட்டிகளில் அர்ஜெண்டினா அணியினருடன் மெஸ்ஸி விளையாட இருக்கிறார். இந்தியாவில் ஃபுட்பாலை பிரபலப்படுத்தும் நோக்கில், இந்த போட்டிகள் நடைபெறும் என அர்ஜெண்டினாவின் ஸ்பான்சரான HSBC தெரிவித்துள்ளது. மெஸ்ஸி கடைசியாக கடந்த 2011ல் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடினார்.
Similar News
News December 9, 2025
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்

இந்திய தேசிய மகளிர் ஆணையம், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் 31 நகரங்களில் (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) 12,770 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 9, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது அப்டேட்

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இம்மாத இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. வேட்டி, சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வரை வழங்குவது தொடர்பாகவும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
News December 9, 2025
இந்தியாவில் ₹1.5 லட்சம் கோடி முதலீடு: மைக்ரோசாப்ட்

இந்தியா தனது லட்சியத்தை அடைவதற்கு மைக்ரோசாப்ட் துணை நிற்கும் என்று சத்யா நாதெல்லா உறுதியளித்துள்ளார். இதுபற்றி PM மோடியுடன் உரையாடியதாகவும், இந்தியாவின் AI வளர்ச்சிக்கு ₹1.5 லட்சம் கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தொகையானது, ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு என்றும் இந்தியாவின் AI எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்பு, திறனை உருவாக்கிட உதவும் எனவும் கூறியுள்ளார்.


