News March 10, 2025

மூடநம்பிக்கையின் உச்சம்… பூனையை எரித்த கொடூரம்!

image

உ.பி. மாநிலம் மொரதாபாத்தில் பெண் ஒருவர் வெளியே புறப்பட்டபோது காட்டுப் பூனை குறுக்கே சென்றதாம். இதனை அபசகுணமாக எண்ணிய அவர், நண்பர்கள் உதவியுடன் அந்த பூனையை பிடித்து உயிரோடு எரித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூனையை கொன்றதாக பெண், அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.

Similar News

News March 11, 2025

இன்றைய (மார்ச் 11) நல்ல நேரம்

image

▶மார்ச்- 11 ▶மாசி – 27 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 AM – 04:30 AM ▶எமகண்டம்: 09:00 PM – 10:30 PM ▶குளிகை: 12:00 AM- 01:30 AM ▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம் : ஆயில்யம்.

News March 11, 2025

பெரும் சைபர் தாக்குதலுக்கு உள்ளான ‘X’: மஸ்க்

image

X தளம் முடங்கியது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். அதாவது, X தளம் மீது பெரும் சைபர் தாக்குதல் நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தினமும் நடப்பதாகவும், இதன் பின்னணியில் ஒரு குழு (அ) நாடு இருக்கலாம் என சந்தேகித்துள்ளார். தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் X தளம் நேற்று ஒரே நாளில் 3 முறை முடங்கியது.

News March 11, 2025

சைலண்ட் ஹீரோ.. ஸ்ரேயாஸை புகழ்ந்த ரோஹித்

image

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை சைலண்ட் ஹீரோ என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி குறித்து பேசுகையில், தாம் துவக்க ஆட்டக்காரராக 79 ரன்கள் குவித்ததை சுட்டிக்காட்டினார். ஒருவேளை தாம் ரன் குவிக்க தவறினாலும் ஸ்ரேயாஸ், அக்சருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது பணியை செய்திருப்பார் என்றும் ரோஹித் கூறினார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் 48 ரன்கள் சேர்த்தார்.

error: Content is protected !!