News March 26, 2025

மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

image

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News January 8, 2026

ஒரு பைசா செலவில்லாமல் Course படிக்கணுமா?

image

ஒரு பைசா செலவில்லாமல் AI, டெக், Cyber Security போன்ற படிப்புகளை படிக்க வேண்டுமா? IBM இணையதளத்தில் இதற்கான இலவச Course-கள் உள்ளன. இதில் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு தேவையானவை பற்றி வீடியோ வடிவில் படிக்கலாம். https://skillsbuild.org/ பக்கத்திற்கு சென்று முழு தகவலையும் தெரிந்துகொள்ளுங்கள். SHARE.

News January 8, 2026

வலுவடையும் புயல் சின்னம்.. அடைமழை தான்!

image

சென்னையில் இருந்து 1,070 கிமீ தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் நிலை கொண்டிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், இதனால் புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News January 8, 2026

FLASH: இந்தியா மீது 500% வரி விதிக்க டிரம்ப் முடிவு!

image

இந்தியா மீது 500% வரிவிதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இம்மசோதா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா, பிரேசில் மீது 500% வரி விதிக்க பரிந்துரை செய்கிறது. இம்மசோதா மீது அடுத்த வாரம் US பார்லிமென்ட்டில் வாக்கெடுப்பு நடைபெறும் என அந்நாட்டு MP லிண்ட்சே கிரஹாம் அறிவித்துள்ளார். இந்தியப் பொருள்களுக்கு US விதித்த 50% வரி விதிப்பால் ஏற்கெனவே ஏற்றுமதி கடுமையாகப் பாதித்துள்ளது.

error: Content is protected !!