News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News March 27, 2025
அப்பாவின் சந்தேகத்திற்கு பலியான பிஞ்சுக் குழந்தை

‘கருப்பான நமக்கு எப்படி வெள்ளை நிற குழந்தை பிறந்தது’ என மனைவியை டார்ச்சர் செய்த கணவர், பெற்ற மகளையே கொலை செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த அக்ரம் ஜாவித்தின் மனைவி, இரண்டரை ஆண்டுக்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இருவரும் கருப்பாக இருந்த நிலையில், குழந்தை வெள்ளையாக இருந்துள்ளது. இதனால், மனைவியை தொடர் சித்ரவதை செய்துவந்த அவர், குழந்தையை கொன்றுவிட்டு இப்போது கம்பி எண்ணுகிறார்.
News March 27, 2025
கண்ணை பறிக்கும் சல்மான் கான் வாட்ச்.. விலை ₹61 லட்சமா?

ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான்கான் கூட்டணியில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் வரும் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் கையில் கட்டியுள்ள வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராம் ஜென்மபூமி பிரத்யேக எடிசன் வாட்ச்சான இதன் விலை ₹61 லட்சம். Jacob & Co என்ற பிரபலமான வாட்ச் பிராண்ட் இதனை வடிவமைத்துள்ளது.
News March 27, 2025
தமிழகத்திற்கான நிதி.. மத்திய அரசு வழங்க வலியுறுத்தல்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. அதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து சுமூக தீர்வு காணவும், நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ₹2,152 கோடி நிதி நிலுவையில் உள்ளது.