News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News December 28, 2025
தலைமை செயலாளர்களுடன் PM மோடி ஆலோசனை

டெல்லியில், PM மோடி தலைமையில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, பல்வேறு பிரச்னைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனிதவளம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
News December 28, 2025
தவெகவின் சின்னம்.. விரைவில் அறிவிக்கிறார் விஜய்

சேலத்தில் நடக்கவுள்ள விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெகவின் சின்னத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சின்னம் கோரி தவெக விண்ணப்பித்த நிலையில் விசில், மோதிரம், உலக உருண்டை உள்ளிட்ட சின்னங்களில் ஒன்றை EC ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் அறிமுகப்படுத்தும் சின்னத்தை, 15 நிமிடங்களிலேயே உலகளவில் பிரபலப்படுத்த TVK நிர்வாகிகள் ஏற்பாடு செய்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 28, 2025
4-வது டி20: இன்று இந்தியா Vs இலங்கை

இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 4-வது டி20 திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 8 விக்கெட், 2-வது டி20-ல் 7 விக்கெட், 3-வது டி20-ல் 8 விக்கெட் என 3 போட்டிகளில் வெற்றிபெற்று IND தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனையில் IND வீராங்கனைகள் உள்ளனர். அதேநேரம், ஆறுதல் வெற்றி பெறுவதற்காக SL அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.


