News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News January 7, 2026
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறந்த நிலையில், இன்று 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை திருவையாறு காவிரி கரையில் உள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் ஹெத்தை திருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 7, 2026
திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறாது: சீமான்

தவெகவிடம் கூட்டணிக்கு ரகசியமாக காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் நீண்ட நாள்களாக பரவி வருகிறது. இந்நிலையில் தொகுதி பேரம் நடத்தவே காங்., இதுபோன்ற செய்தியை பரப்பி விடுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து அவர்கள் வெளியே வரமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருப்பது கஷ்டமாக இருந்தால் காங்., தனித்து போட்டியிடலாமே எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
News January 7, 2026
தமிழகத்தில் 12-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: IMD

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலையில், இன்று காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனிடையே குமரிக்கடல், அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 12-ம் தேதிவரை கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உள்தமிழகத்தில் லேசான பனிமூட்டம் நிலவுமாம்.


