News March 26, 2025

மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

image

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News January 11, 2026

ரேஸ் களத்தில் அனிருத்.. AK 65 காம்போ ரெடி (PHOTOS)

image

ரேஸ் களத்தில் தீவிரம் காட்டும் அஜித்துடன், அவ்வப்போது திரைபிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். சிம்பு, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அஜித்துடன் இருக்கும் வீடியோக்கள் வைரலான நிலையில், அந்த வரிசையில் அனிருத்தும் இணைந்துள்ளார். இருவரும் ரேஸ் களத்தில் இருக்கும் போட்டோக்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த காம்போ எப்படி?

News January 11, 2026

இந்தியாவில் எப்போதும் இந்து PM: ஓவைசிக்கு பதிலடி!

image

இந்திய அரசியலமைப்பு சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதாகவும், ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் PM ஆக வருவார் என்றும் ஓவைசி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா, அரசியலமைப்பு சட்டப்படி யார் வேண்டுமானாலும் PM ஆகலாம்; ஆனால் இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்திய பிரதமர் ஒரு இந்துவாகவே இருப்பார் என்று தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 11, 2026

அண்ணாவை பார்த்து யாரும் பயப்படல: நயினார்

image

விஜய்க்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு சென்சார் போர்டை கையில் எடுத்திருக்கிறது என CM ஸ்டாலின் <<18812153>>கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பராசக்தி படத்தை மட்டும் எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டு அவர்களுக்கு உள்ள விதிப்படி செயல்படுகின்றனர் எனவும் அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!