News March 5, 2025
தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு இயல்பை விட 2°C வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மார்ச் மாதமாகியும் காலையில் பனிமூட்டம் நிலவுகிறது. ஆனால், காலை 8 மணிக்கு மேல் சம்மர் வந்ததைப் போல வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், அதிகாலை லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் IMDஅறிவித்துள்ளது.
Similar News
News November 5, 2025
கவர்ச்சி பிம்பத்தை மாற்ற முயலும் ஸ்ரீலீலா

தெலுங்கு படங்களில் தன்னை பெரும்பாலும் கிளாமர் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததாக ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார். அழுத்தமான கேரக்டர் கிடைக்காத விரக்தியில் இருந்த தனக்கு ‘பராசக்தி’ பட வாய்ப்பு கிடைத்ததாகவும், இப்படம் தனது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதன்பிறகு, தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி பிம்பம் மாறத்தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 5, 2025
10-வது போதும்: 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணிகள்!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ₹15,900- ₹50,400 வயது: 18- 30 விண்ணப்பிக்க <
News November 5, 2025
மாணவர்களுக்கு HAPPY NEWS.. தமிழக அரசு அறிவித்தது

கல்லூரி மாணவர்களுக்கு முதற்கட்டமாக வரும் பிப்ரவரி மாதம் லேப்டாப் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. 2025 – 26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 3 நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், இதற்கான ஆலோசனை கூட்டம் DCM உதயநிதி தலைமையில் நடைபெற்றது.


