News March 5, 2025
தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில்!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாள்களுக்கு இயல்பை விட 2°C வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மார்ச் மாதமாகியும் காலையில் பனிமூட்டம் நிலவுகிறது. ஆனால், காலை 8 மணிக்கு மேல் சம்மர் வந்ததைப் போல வெயில் கொளுத்தி வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும், அதிகாலை லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் IMDஅறிவித்துள்ளது.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது உரிமை கோரப்படாத வைப்பு தொகைகள் இருப்பின், அவை ஆர்.பி.ஐ-ன் ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி’க்கு மாற்றப்படும். தொகையை பற்றி விவரங்களை https://udgam.rbi.org.in இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் திரும்ப பெற இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்

பிக்பாஸில் இந்த வாரம் இரண்டு பேர் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. FJ, கம்ருதீன், ரம்யா ஜோ, சபரிநாதன், சாண்ட்ரா, கானா விநோத், வியானா உள்ளிட்டோர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் ரம்யா ஜோ, சாண்ட்ரா எலிமினேட் ஆகியுள்ளனர். வீட்டில் விதிகளை மீறிய விஜே பார்வதி, கம்ருதீனையும் விஜய் சேதுபதி கடுமையாக எச்சரித்திருக்கிறார்.


