News February 23, 2025
மிகச் சிறந்த நடனக் கலைஞர் காலமானார்

நாட்டின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான மயாதார் ராவுத் (92) வயது மூப்பால் டெல்லியில் காலமானார். ஒடிசாவில் பிறந்த இவர், புறக்கணிக்கப்பட்ட ஒடிசி நடனத்தை மீட்டெடுத்து, அதற்கு புதிய வடிவம் கொடுத்து, இன்று கிளாசிகல் நடனங்களில் ஒன்றாக ஒடிசி திகழக் காரணமாக இருந்தார். இதனால் அவரை ‘ஒடிசி நடனத்தின் தந்தை’ என்கின்றனர். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
Similar News
News February 24, 2025
துளசியை இப்படிதான் வழிபட வேண்டும்

கடவுளுக்கு உகந்த செடியான துளசியினை வழிபடுவதற்கு சில முறைகள் உள்ளன. (1) துளசியை வீட்டில் வெயில்படும், சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும் (2) தினமும் காலை குளித்துவிட்டு துளசியின் முன் விளக்கு, ஊதுபத்தி ஏற்றலாம் (3) மந்திரங்களை ஓதியபடி துளசி மாடத்தை சுற்றி வர வேண்டும் (4) துளசிக்கு பூக்களை தூவி பூஜை செய்யலாம் (5) அசுத்தமான கைகளால் துளசி செடியை தொட வேண்டாம்.
News February 24, 2025
திருமணத்தை மீறிய உறவில் இத்தனை வகைகளா!

திருமணத்தை மீறிய உறவுகளை, அவற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் 8 வகைகளாக பிரித்துள்ளனர்: 1)எமோஷனல் உறவு (உடல் நாட்டமில்லாதது) 2)இன்னொருவர் மீது காதல் கொள்வது 3)ஒருநாள் உறவு 4)தவறான நபரை மணந்து கொண்டோம் என்று நினைத்து வேறொருவர் மீது ஏற்படும் தீவிரக் காதல் 5) செக்ஸுக்கு அடிமையாவதால் ஏற்படும் உறவுகள் 6)பழிவாங்க இன்னொரு உறவை நாடுவது 7)ஆன்லைன் காதல் 8)ஒரு உறவிலிருந்து வெளியேற இன்னொரு உறவை நாடுவது.
News February 24, 2025
ஜெ., பிறந்தநாளுக்கு அரசு சார்பில் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் உருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. மெரினாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, ஜெ., பிறந்தநாளில் ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு உதவிச் செய்ய நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.