News May 13, 2024
ஆளுநர் மாளிகை உத்தரவு பிறப்பிக்கவில்லை

அண்ணாமலை மீது வழக்குத் தொடர அனுமதிப்பது குறித்து, ஆளுநர் மாளிகை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ராஜ்பவன் விளக்கமளித்துள்ளது. அண்ணாமலை மீது, பியூஸ் மானுஷ் என்பவர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், மேல்நடவடிக்கைக்கு ராஜ்பவன் அனுமதி அளித்ததாக வெளியான தகவலை மறுத்துள்ள ராஜ்பவன், அதுபோன்ற செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ளது.
Similar News
News November 19, 2025
சற்றுமுன்: விலை ₹3,000 உயர்ந்தது

கடந்த 5 நாள்களாக தொடர்ந்து சரிந்து வந்த வெள்ளியின் விலை இன்று(நவ.19) கிராமுக்கு ₹3-ம், கிலோவுக்கு ₹3,000-ம் உயர்ந்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹173-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,73, 000-க்கும் விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, வரும் நாள்களில் வெள்ளியின் விலையில் கணிசமான ஏற்றம் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
News November 19, 2025
கண்களை பாதுகாக்கும் 7 நட்ஸ் & உலர் பழங்கள்!

இன்றைய சூழலில் அனைவரும் செல்போன், கம்யூட்டர்களை அதிகம் பயன்படுத்துவதால் கண் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இந்நிலையில், அதற்கு இடம் கொடுக்காமல் கண்களை பாதுகாக்க, பார்வை திறனை மேம்படுத்த இந்த 7 நட்ஸ் மற்றும் உலர் பழங்கள் உட்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்பதை அறிய மேலே SWIPE பண்ணுங்க.
News November 19, 2025
FLASH: சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஏர்போர்ட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிராங்க்பர்ட், துபாய், கோலாலம்பூர் விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.


